சென்னை, ஜன. 31- “கலைஞர் எழுதுகோல் விருது”க்கான விருதாளர்களை தேர்வு செய்யும் பரிசீல னைக்குழு தலைவராக பேராசிரியர் அருணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை சார்பில் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: 2021-22ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில், இதழியல் துறை யில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் ஒரு சிறந்த இதழியலாள ருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுது கோல் விருது’ மற்றும் ரூபாய் 5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் ஒவ்வோர் ஆண்டும் கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் 3ஆம் தேதி இந்த விருது வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இந்நிலையில் விருதாளரை தேர்வு செய்யும் பரிசீலனைக் குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தலைவராக பேராசிரியர் அருணன், உறுப்பினர் செயலராக கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) உறுப்பினர் களாக மூத்த பத்திரிகையாளர்கள் ஜென்ராம், சமஸ், தராசு ஷியாம், பேராசிரியர் முனை வர் பர்வீன் சுல்தானா, தமிழ்த்துறைத் தலைவர் (ம) படைப்பாளர் முனைவர் ரெ.மல்லிகா (எ) அரங்க மல்லிகா ஆகியோர் அறிவிக்கப் பட்டுள்ளனர். இவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வுக் குழு மாற்றியமைக்க படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.