tamilnadu

உலகச் செய்திகள்

ஒமைக்ரான் வைரஸ் 110 நாடுகளில் பரவியுள்ளது என்றும், இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி வருகிறது என்று உலக சுகாதாரக் கழகம் தெரிவித்துள்ளது. அதே வேளையில், தென் ஆப்பிரிக்காவில் எந்த இடத்தில் முதன்முறையாக இந்த ஒமைக்ரான் இருப்பதாகக் கண்டறியப்பட்டதோ, அங்கு தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக சுகாதாரக் கழகம் கூறியுள்ளது.

கொலம்பியாவில் குஸ்வவா ராமிரெஸ் மற்றும் வில்மர் அங்காரிடா ஆகிய இரு சமூக ஊழியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக ஊழியர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவதே இந்த அதிர்ச்சிக்குக் காரணமாகும். 2021 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரையில் 168 சமூக ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொலைகள் நடந்த பகுதிகளில் ஆயுதந்தாங்கிய குழுக்கள் உலாவி வருவதற்கான எச்சரிக்கை காவல்துறையால் விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மோசமாக நடத்தப்படுவதாக இஸ்ரேல் காவல்துறை மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி  பாலஸ்தீனத்தைச் சேர்ந்த மூன்று பெண் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர். தங்கள் போராட்டம் முதல் கட்டம்தான் என்றும், ஒவ்வொரு கட்டமாக மற்ற பெண் கைதிகளும் போராட்ட த்தில் பங்கேற்பார்கள் என்று கூறியிருக்கிறார்கள். தங்கள் மீது அடிக்கடி சிறைக்குள் தாக்குதல் நடப்பதாக பெண் கைதிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.