சென்னை,மார்ச் 8- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண வழக்கில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மார்ச் 21 ஆம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி காலமானார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலர் கருத்துகளை தெரிவித்தனர். இதனால், கடந்த 2017ஆம் ஆண்டு செப்ட ம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிராக அப்போலோ மருத்துவமனை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் விசாரணைக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இந்த தீர்ப்பை எதிர்ப்பு அப்போலோ உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அப்போது, ஆறுமுக சாமி ஆணையத்தின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும், ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவக் குழுவை அமைக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவு 8 உறுப்பினர்களை கொண்ட மருத்துவர்கள் குழுவை எய்ம்ஸ் நியமித்தது. இதன் காரண மாக ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறா மல் இருந்த நிலையில், தற்போது ஆறுமுக சாமி ஆணையம் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் மார்ச் 21 ஆம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.