அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் புதிய செயற்கை இழை ஓடுதளப் பாதை
காணொலியில் துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்
தஞ்சாவூர், மே 6 - தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் ரூ.7 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை ஓடுதளப் பாதை மற்றும் இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம் மற்றும் சிஎன் விளை யாட்டிற்கான ஸ்டார் அகாடமி STAR Academy (SPORTS TALENT ADVANCE MENT & RECOGNITION) ஆகியவற்றை திங்கள்கிழமை தமிழ்நாடு துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை நேரு விளையாட்டரங்கில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில் ரூ.3 கோடியில் முதல மைச்சர் சிறு விளையாட்டரங்கம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இதையொட்டி தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், தஞ்சா வூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், தஞ்சாவூர் மாவட்ட தடகள சங்க தலைவர் டி.கே.வி.கிருஷ்ணசாமி வாண்டையார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன், ஸ்டார் அகா டமி விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி, புதிதாக அமைக்கப் பட்டுள்ள செயற்கை இழை ஓடுதளப் பாதை யில் முன்னாள் தடகள வீரர்கள் மற்றும் நமது மாவட்ட தேசிய அளவிலான வீரர், வீராங் கனைகள் பயிற்சி ஓட்டத்தினை கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.