ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தால் அதற்கு முழுப்பொறுப்பு அமெரிக்காவையே சாரும் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. நல்லதொரு உடன்பாட்டில் கையெழுத்திட ஈரான் தயாராகவே இருந்து வருகிறது. அதை பேச்சுவார்த்தையின்போது தெளிவாகக் கூறியிருக்கிறோம் என்று ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் உசேன் அமீர் அப்துல்லாஹியான் கூறியுள்ளார். ஈரானைப் பொறுத்தவரை இன்னும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் இருந்து தனது படைகளை திரும்பப் பெற்றுக் கொள்வது என்ற பிரான்சின் முடிவை மாலி மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். மாலியின் தலைநகர் பமாகோவில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தக் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். தலைநகரின் வீதிகள் மக்களால் நிரம்பிக் காணப்பட்டன. அந்த நாட்டில் பிரான்சின் தலைமையின் கீழ் இயங்கி வந்த சில தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கும், ரஷ்ய அரசுக்கும் தொடர்பில்லை என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் கூறியுள்ளார்.
தென் பசிபிக் பகுதியில் உள்ள தீவு நாடான டோங்கோவுக்கு சீனா தொடர்ந்து நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகிறது. அண்மையில் இரண்டு கப்பல்களில் பேரிடர் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன. 1,400 டன் எடையுள்ள நடமாடும் வீடுகள், டிராக்டர்கள், தண்ணீர்க் குழாய்கள், உணவு மற்றும் மருந்துகள் அந்தக் கப்பல்களில் இருந்தன. சீனாவின் குவாங்சோ நகரில் இருந்து கிளம்பிய இந்தக் கப்பல்கள் டோங்கோ சென்றடைந்தன.