மதுரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் பகுதியை சேர்ந்த பவித் ரன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில்முறைகேடு செய்ததாக சிபிசிஐடிகாவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பல்வேறுகட்ட விசாரணைகள் முடிந்து ஜாமீனில் உள்ளேன். விசாரணையின்போது எனது 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகிய அனைத்து உண்மைச் சான்றிதழ்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர். தற்போது தேனி நீதித்துறைநடுவரிடம், சமர்ப்பிக்கப்பட்ட பறிமுதல் செய்யப்பட்ட ஆவணத்தோடு இவை இணைக்கப்பட்டுள் ளது.இந்த நிலையில் தேனிநீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்10, 12-ஆம் வகுப்புகளின் மதிப்பெண் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கக் கோரிய வழக்கில் 10, மற்றும்12-ஆம் மதிப்பெண் சான்றிதழ் களை வழங்க உத்தரவிட்டு சாதி,பள்ளி மாற்று சான்றிதழ் வழங்கமறுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது.
எனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தேனி நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு தடை விதித்து எனது சாதி மற்றும் பள்ளி மாற்று சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி தாரணி முன்பு புதனன்று விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் மாணவரின் மேற்படிப்பிற்காக சான்றிதழ் வழங்க வேண்டும் என கூறப்பட்டது.இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “தேனி சிபிசிஐடிகாவல்துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 12-ஆம் தேதிக்குஒத்திவைத்தனர்.