tamilnadu

img

மாணவி ஸ்ரீமதி மரணத்தில் மர்மம்

கள்ளக்குறிச்சி, ஜூலை 17- கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார் என பள்ளி நிர்வாகம் கூறியது உண்மைக்கு புறம்பானது என் றும், மாணவியின் மரணத்தில் மர்மம் உள்ளது என்றும் பெற் றோர், உறவினர்கள் மற்றும் ஜன நாயக இயக்கங்கள் தரப்பில் சந்தேகம்  எழுப்பப்பட்ட நிலை யில், போராட்டக்களம் பெரும் வன்முறையாக மாற்றப்பட்ட பின்னணியில், அங்கு பதற்றம் எழுந்துள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராம த்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (16). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரிலுள்ள தனியார் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புபடித்தார். கடந்த 15 தினங்களாக அப்பள்ளி யின் விடுதியில் தங்கி கல்வி பயின்றுள்ளார்.

தற்கொலை அல்ல!

இந்நிலையில் ஸ்ரீமதியின் தாயாருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் 5 தினங்களுக்கு முன்பு காலையில் தொலைபேசி மூலம் உங்கள் மகள் மூன்றாவது மாடி யிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என தகவல் கொடுத்துள்ளனர். இந்த தக வலை கேட்டதும் அதிர்ச்சியுற்ற தாய், உடனடியாக புறப்பட்டு வந்து, பள்ளி விடுதியில் உள்ளே நுழைந்து பார்த்ததில் சுவரில் ரத்தக்கறை படிந்த கரங்கள் பதிந்துள்ளது தெரியவந்துள் ளது. மேலும் கீழே விழுந்து கிடந்த தாக கூறப்படும் மாணவி ஸ்ரீமதி யின் உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்துள்ளது.  தனது மகள் சந்தேகத்திற் கிடமான முறையில் உயிரிழந்தது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோர் மற்றும் உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

மெத்தனமும்-  மக்கள் ஆவேசமும்!

இந்நிலையில் சனிக்கிழமை யன்று (ஜூலை 16) கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள உடலை  வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி யினர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். கள்ளக்குறிச்சி நான்கு முனை  சந்திப்பில்  3 மணி நேரத்திற்கும் மேல் சாலை மறியல் நீடித்தது. இதனையடுத்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சமாதானம் செய்தும் முடியாத தால், போராட்டத்தில் ஈடுபட்டி ருந்தவர்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டனர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங் கர் மற்றும் செயற்குழு உறுப்பின ர்கள், மாதர், வாலிபர், மாணவர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றிருந்த நிலையில் மாதர் மற்றும் வாலி பர் சங்கத் தலைவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமையன்று (ஜூலை 17)  சில அமைப்புகளைச் சேர்ந்த  நிர்வாகிகள் வேறு சில மாவட்டங் களில் ஏராளமானோரை அழைத்து வந்து கனியாமூர் சக்தி பள்ளியின் முன்பு நடத்திய போராட்டம், வன்முறைக் கள மாக மாறியது. பள்ளி வாகனங் களை அவர்கள் சூறையாடினர். இதனை தடுக்க முயன்ற காவல் துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நிலையில், போராட்டம் வன்முறையாக மாற்றப்பட்டது. மாணவி ஸ்ரீமதி இறந்து இரண்டு தினங்களுக்கு மேல் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் மெத்தனமாக இருந்ததுதான் இந்த நிலைக்கு காரணம் என பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

காவல்துறை மிரட்டல்

உடற்கூராய்வில் மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும் மாணவியின் உடைகளில் ரத்தக்கறைகள் இருந்ததாகவும் மாணவியின் உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத னால் மாணவியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இதனால், கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் தலைமை யில் 500-க்கும் மேற்பட்ட போலீ சார் சம்பவ இடத்தில் குவிக்கப் பட்டுள்ளனர். அங்கு நடை பெற்ற வன்முறை வன்மையாக கண்டிக்கத்தக்கது; வன்முறை யில் ஈடுபட்டவர்கள் மீது ஆதா ரத்தின் அடிப்படையில் நட வடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை செய்துள்ளார். இதற்கிடையில் மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கல வரத்தில் ஈடுபட்டவர்கள் மீது  வீடியோ ஆதாரத்தின் அடிப்படை யில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபுவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், முதல்வரின் உத்தர வைத் தொடர்ந்து, தமிழக உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி, தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஆகி யோர் சின்னசேலம் விரைந்துள்ள னர். முன்னதாக உளவுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

நீதிவிசாரண தேவை:சிபிஎம்

இந்நிலையில், மாணவி ஸ்ரீமதி மரணத்தில் உண்மையை கண் டறிய உயர் நீதிமன்ற நீதிபதி தலை மையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயற்குழு வலியுறுத்தியுள்ளது.. இது குறித்து  கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.எம்.  ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சம்பந்தப்பட்ட சக்தி பள்ளியில் ஏற்கனவே 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் மர்ம மரணம் அடைந்துள்ள நிலை யில் மாணவி ஸ்ரீமதியின் மரணம் பல்வேறு சந்தேகங் களை எழுப்பியுள்ளது. எனவே ஸ்ரீமதியின் தாயார் எழுப்பியுள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் வகையில் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை யில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும்.  இப்பள்ளியை உடனடியாக மூடுவதுடன் மாண வர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் வேறு பள்ளி களில் கல்வியைத் தொடர தமிழக அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட ஸ்ரீமதியின் குடும்பத் தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணமும் ஒருவருக்கு அரசுப்  பணியும் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை

ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம்  தீவிரமடைந்த நிலையில், தற்போது காவல் துறையினரு டன் மாவட்ட கல்வி அலுவலர்களும் விசாரணை நடத்தி  வருகின்றனர். இதில் பள்ளி நிர்வாகத்திற்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தால், துறைரீதியாக மிகக் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.