கிரீன்வேஸ் சாலை-மந்தைவெளி இடையே மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி நிறைவு
சென்னை, அக். 19 – கிரீன்வேஸ் சாலை - மந்தைவெளி இடையே ஒரு மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி நிறை வடைந்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2, வழித்தடம் 3-ல் கிரீன்வேஸ் சாலை -மந்தைவெளி நிலையம் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதை பணிகளுக் காக `நொய்யல்’ மற்றும் `வைகை’ என்று பெயரிடப் பட்ட இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. `வைகை’ சுரங்கம் தோண்டும் இயந்திரம், 2024- இல் பிப்ரவரி மாதம் கிரீன் வேஸ் சாலை நிலையத்திலி ருந்து 775 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியைத் தொடங்கி அக். 18ந் தேதி மந்தைவெளி நிலையத்தை வந்தடைந் தது. குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளுக்கு அடியில் சுரங்கம் தோண்டும் பணி வெற்றிகரமாக நடைபெற்று ள்ளது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் 75 கட்டிடங்க ளுக்கு கீழே சென்று பாதிப்பின்றி அகழ்ந்து சுரங்கத்தை தோண்டி யுள்ளது. கட்டிடங்களுக்கு கீழே 9 மீட்டரிலிருந்து 12 மீட்டர் ஆழத்தில் இந்த சுரங்கம் தோண்டப்பட்டுள் ள்ளது. மந்தைவெளி பகுதியில் கழிவுநீர், குடிநீர் குழாய்கள், மின்சார இணைப்புகள் போன்ற பல முக்கியமான அடிப்படை வசதிக் கட்டமை ப்புகள் இருந்தன. இதன் காரணமாக, சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு கூடு தல் கால அவகாசம் தேவைப் பட்டது. `வைகை’ சுரங்கம் தோண்டும் இயந்திரம் பெரும்பாலும் வண்டல் மண் மணல் நிறைந்த நிலப்பரப் பைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. இந்த இயந்திரத்தின் வெட்டும் முகப்பில் 13 முறை பராம ரிப்புப் பணிகள் மேற்கொள் ளப்பட்டது. கடினமான இந்தச் சுரங்கம் அமைக்கும் பணியை முடிக்க 610 நாட்கள் தேவைப்பட்டது. நொய்யல் இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் `நொய்யல்’, மந்தைவெளி நிலையத்தை அடுத்த மாத த்தில் வந்தடையும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.‘ சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த மாதத் தில் மட்டும் ஏற்கனவே மூன்று இடங்களில் சுரங்கப் பாதை அமைக்கும் பணியை நிறைவு செய்துள்ளது. முதலில் ஆர்.கே.சாலை, அடுத்து கோடம்பாக்கம், மூன்றாவதாக மந்தை வெளியில் சுரங்கப்பாதை தோண்டும் பணி நிறைவடை ந்துள்ளது. அடுத்தடுத்த மாதங்களில் பல சுரங்கம் தோண்டும் இயந்திரங்களின் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைய உள்ளன.
