மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ்-ராணியின் மகள் பி.வினோதினி - எம்.தமிழரசன் ஆகியோரது திருமண வரவேற்பு விழா வியாழனன்று (பிப்.23) பல்லாவரத்தில் நடைபெற்றது. சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் ஒய்.இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருமண நிகழ்வில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.