tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளராக மேவை.சண்முகராஜா தேர்வு

சேலம், ஜன.1- மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாள ராக மேவை.சண்முகராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 23 ஆவது சேலம் மாவட்ட மாநாடு ஜலகண்டாபுரம் பகுதியில் டிசம்பர் 30, 31 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு டி.உதய குமார், பொன்.ரமணி, கவிதா ஆகியோர் தலைமை வகித்த னர். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராம கிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றி னார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வ சிங், என்.குணசேகரன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னர். மாவட்ட செயலாளர் பி. ராமமூர்த்தி வேலை அறிக் கையை முன்மொழிந்து பேசி னார். இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக் குழுவின் செயலா ளராக மேவை. சண்முக ராஜா தேர்வு செய்யப்பட் டார். மேலும், மாவட்ட செயற் குழு உறுப்பினர்களாக மேவை.சண்முகராஜா, பி. ராமமூர்த்தி, ஆர்.வெங்கட பதி, டி.உதயக்குமார், ஏ. ராமமூர்த்தி, ஐ.ஞானசௌந் தரி, எஸ்.கே.சேகர், எம்.குண சேகரன், ஏ.முருகேசன், பொன்.ரமணி, ஜி.கணபதி, வி.இளங்கோ ஆகியோர் உட்பட 39 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்ந்தெடுக் கப்பட்டது. முடிவில், வர வேற்பு குழு செயலாளர் கே. ராஜாத்தி நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

இம்மாநாட்டில், சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன் றியத்தில் கொப்பரை தேங் காய் கொள்முதல் நிலையம், தேங்காய் எண்ணெய் தயா ரிக்கும் ஆலை, நார் தொழிற் சாலை அமைக்க வேண்டும். காவிரி சரபங்கா நீரேற்றும் திட்டத்தை நீர்வழி பாதையில் அமலாக்க வேண்டும். பெட் ரோலிய திட்ட குழாய்களை நெடுஞ்சாலை வழியே செயல்படுத்த வேண்டும். விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப் பதை கைவிட்டு, அத்திட் டத்தை கேபிள் வழியே செயல்படுத்திட வேண்டும். விண்ணப்பித்த ஒரு வார காலத்திற்குள் மலைவாழ் பழங்குடி இனத்தவருக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். வன உரிமை சட் டத்தின் கீழ் பட்டா கோரும் மனுக்களின் மீது உடனடி யாக நடவடிக்கை எடுத்து பட்டா வழங்க வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.