சென்னை, ஏப். 8- சென்னை ஐஐடி மாணவி பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை ஐஐடி மாணவி மீதான பாலியல் வன்முறை வழக்கில் குற்றவாளிகள் அனை வரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி, மாநிலச் செயலாளர் பிர மிளா, தென்சென்னை மாவட்டச் செயலாளர் சித்ரகலா ஆகியோர் காவல் துறை முதன்மை இயக்கு நரை சந்தித்து வெள்ளியன்று (ஏப். 8) மனு அளித்தனர். பின்னர் இதுகுறித்து பி.சுகந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை ஐஐடி மாணவி தன்னுடன் பயிலும் மாணவனால் பாலியல் வன்கொடுமை மற்றும் சாதீய பாகுபாடுகளுக்கு உள்ளாக் கப்பட்ட வழக்கில் காவல்துறை உரிய வழக்கு பதிவு செய்யாமலும்,
எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட பின்பும் குற்றவாளிகளை கைது செய்யாமலும் இருந்த நிலையில் மாதர் சங்கத்தின் தலையீட்டுக்கு பின்பு உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு மாற்றம் செய்யப்பட் டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றமான பாலியல் வன்புணர்ச்சி யில் 376 மற்றும் எஸ்சி., எஸ்டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உரிய பிரிவுகள் பதிவு செய்யப்படாத நிலையில் மாதர் சங்கத்தின் தலையீட்டுக்கு பின்பு உரிய சட்டப் பிரிவுகளை வழக்கில் காவல்துறை இணைத்துள்ளது. ஆனால் குற்றவாளிகள் சென்னையில் முன்ஜாமீன் பெற்றி ருந்த நிலையில், காவல்துறை அந்த முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யாமல், மேற்குவங்கம் சென்று அவர்களை கைது செய்து, அங்குள்ள நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தபட்டுள்ளனர். நீதிமன்றத்தில் முதல் குற்ற வாளியை ஆஜர்படுத்திய பின் அங்குள்ள நீதிமன்றம் குற்ற வாளியை விடுவித்துள்ளது. காவல்துறை குற்றவாளிகளைக் கைது செய்ய செல்வதற்கு முன்பு முன்ஜாமீனை ரத்து செய்யும் உத்த ரவை நீதிமன்றத்தில் பெற்று பின்பு கைது செய்ய சென்றிருந்தால் உறுதியாக குற்றவாளிகளை கைது செய்திருக்க முடியும்.
மேலும் இந்த வழக்கில் தொடர் புடைய 8 பேரில் 3 குற்றவாளிகள் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுள்ள னர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கோ அல்லது ஜனநாயக அமைப்புக ளுக்கோ எப்படி இந்த காவல் துறை மீது எப்படி நம்பிக்கை ஏற்படும். இந்தியாவில் உள்ள மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்று முறை யாக குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை. இவர்கள் எப்படி வெளிநாடு சென்று குற்றவாளி களை கைது செய்யப் போகிறார் கள் என்று கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் குற்றவாளிக ளுக்கு சாதகமாக ஓராண்டுக்கும் மேல் மெத்தனமாக செயல்பட்டு கைது செய்யாமல் இருந்த முன்னாள் விசாரணை அதிகாரி ஆண்டனி பிஜித்ரா மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் இந்த வழக்கு விசாரணையை மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி இருந் தோம்.
ஆனால் காவல்துறை அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. எனவேதான் காவல் துறை இயக்குநரை சந்தித்து இந்த வழக்கை தமிழக காவல்துறை நடத்தக் கூடாது, சிபிசிஐடி விசார ணைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். எஸ்.சி., எஸ்.டி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உடனடி யாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை அதிகாரி மாற்றப்பட்டாலும் கூட அவருடன், ஆண்டனி விஜித்ரா செல்கிறார். இவரைப் பார்த்தாலே அந்த பாதிக்கப்பட்ட மாணவி மன அழுத்தத்திற்கு ஆளாகிறார். எனவே விசாரணை அதிகாரியோடு அவர் செல்லக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளோம். உடனடியாக நடவடிக்கை எடுப்ப தாக காவல் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.