பமாகோ, பிப்.9- கடும் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள மாலியை பிளவு படுத்த பிரான்ஸ் முயற்சிக்கிறது என்று அந்நாட்டின் பிரதமர் சோகுல் மைகா குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பிரான்ஸ் தனது படை களை நிறுத்தியுள்ளது. அங்கு நிலவும் அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி தனது முகாம்களை பலப்படுத்தியிருக்கிறது-மாலியில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. மீண்டும் மக்கள் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று ராணுவம் உறுதி அளித்தி ருந்தாலும் ஆமை வேகத்தில்தான் அதற்கான பணிகள் நடைபெறு கின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலேயே பிரதமரை ராணுவம் நிய மித்தது. பிரதமராக நியமிக்கப்பட்ட சோகுல் மைகா, பிரான்ஸ் ராணு வத்தின் ஆதரவைப் பாராட்டவும் செய்துள்ளார். 2013 ஆம் ஆண்டில் மத அடிப்படைவாதிகள் மாலியின் வடக்குப் பகுதியைக் கைப்பற்றியி ருந்த நிலையில், பிரான்ஸ் படைகள் உள்ளே நுழைந்தன. தென் பகு தியை மத அடிப்படைவாதிகள் கைப்பற்றி விடாமல் பார்த்துக் கொண்டன. இதை அங்கீகரிக்கும் வகையில் சோகுல் மைகா பேசியிருக்கிறார்.
அதே வேளையில், வட பகுதி மற்றும் தென் பகுதி ஆகிய இரண்டும் ஒன்று சேர்ந்து விடாமல் பார்த்துக் கொள்வதில் பிரான்ஸ் தற்போது கவனம் செலுத்தி வருகிறது. அதோடு, இனிமேல் தேவை யில்லை என்று கூறி அமெரிக்கப் படைகளை பிரான்ஸ் திருப்பி அனுப்பி விட்டது. பின்னர், மத அடிப்படைவாதிகள் மீண்டும் தங்க ளை ஒருங்கிணைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். மாலி யில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிக்கு அடிப்படைவாதி கள் திரும்பினார்கள் என்கிறார் சோகுல் மைகா. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளும் மாலி மீது பல்வேறு தடைகளை விதித்துள்ளன. இந்தத் தடைகளும் பிரான்சின் தூண்டுதலால்தான் நடந்தன என்று மைகா குற்றம் சாட்டுகிறார். தன்னை பிரதமராக நியமித்த ராணுவத்தையும் அவர் குறை கூறுகிறார். மக்கள் ஆட்சி கொண்டு வரப்படுவதில் இவ்வளவு தாமதம் அவசியமற்றது என்று பிரதமர் மைகா சுட்டிக்காட்டுகிறார். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளைப் போன்று மாலியும் பிரான்சின் குடியேற்ற நாடாக இருந்தது குறிப்பிடத்தக்கது.