இராமநாதபுரம்: சிபிஎம் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு
இராமநாதபுரம், பிப்.5- இராமநாதபுரம் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட் டன. இதன்படி, இராமேஸ்வரம் நகரமன்ற 2-வது வார்டு சிபிஎம் வேட்பாளர் கே. கருணாகரன், பரமக்குடி நகராட்சி 16வது வார்டு சிபிஎம் வேட்பாளர் வினோதினி, கீழக்கரை நகராட்சி 4-வது வார்டு சிபிஎம் வேட்பாளர் சூரியகலா, கமுதி பேரூ ராட்சி 6-வது வார்டு சிபிஎம் வேட்பா ளர் கே.மாரிமுத்து, அபிராமம் பேரூ ராட்சி 13-வது வார்டு சிபிஎம் வேட்பாளர் ரவிக்குமார் ஆகியோரின் வேட்புமனுக் கள் சனிக்கிழமையன்று பரிசீலனைக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
கம்பம் சிபிஎம் வேட்பாளருக்கு தூய்மைப் பணியாளர்கள் ஆதரவு
தேனி, பிப்.5- கம்பம் நகராட்சி 33-வது வார்டில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ். கனகராஜுக்கு உற்சாக வரவேற்பு அளித்து கம்பம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆதரவு தெரிவித்தனர். வாக்கு சேகரிப்பின் போது கட்சியின் ஏரியா குழு உறுப்பினர் ஐயப்பன், கிளை செயலாளர் பழனியப்பன், சிஐடியு உள் ளாட்சி ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் டி.ஜெயபாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினர்.
திமுக வேட்பாளரிடம் தகராறு செய்த சுயேட்சை
திண்டுக்கல், பிப்.5- திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 19வது வார்டில் திமுக வேட்பாளராக வைகை முகமது சித்திக் போட்டியிடுகி றார். கடந்த முறையும் இவர் வார்டு உறுப்பினராக செயலாற்றியவர். இந்நிலையில், சனிக்கிழமையன்று நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையின் போது, இவரது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரான ராஜா என்ற தீப்பெட்டி ராஜா, திமுக வேட்பாளர் சித்திக் மீது பல்வேறு புகார்களை கூறி அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். அதிகாரிகளை நிர்ப்பந்தித்தார். இதனை திமுகவினர் ஏற்க மறுத்து ஆட்சேபணை செய்தனர். மேலும், அதி முக மற்றும் பாஜக பின்னணியில் இவ் வாறு ராஜா செயல்படுவதாகவும், ஒவ் வொரு முறையும் ராஜா இதே போல் பரி சீலனைக் கூட்டத்தில் தகராறு செய்வ தாகவும் திமுகவினர் கண்டனம் தெரி வித்தனர். இதனால் மாநகராட்சியில் பர பரப்பு நிலவியது. (ந.நி.)
விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளர் நியமனம்
விருதுநகர், பிப்.4- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவ காசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகளில் உள்ள பதவியிடங்க ளுக்கான தேர்தல்கள் நடைபெற உள் ளது. இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பார்வையாள ராக எஸ்.பாலசந்தர் நியமனம் செய் யப்பட்டுள்ளார். தேர்தல் தொடர்பான புகார்களை தேர் தல் பார்வையாளரின் கைப்பேசி எண் ணில் ( 9442313633) அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள், பொதுமக்கள் ஆகி யோர் தெரிவிக்கலாம். மேலும், மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள இரண்டாம் தளத்தில் 24 மணி நேரமும் செயல்படும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை உள்ளது. அதன் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4250 453 என்ற எண்ணிலும் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு அருகே ரூ.79 ஆயிரம் பறிமுதல்
திருவில்லிபுத்தூர், பிப்.5- தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்குட்பட்ட வா.புதுப்பட்டி பேரூராட்சியில் வத்திரா யிருப்பு ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் தலை மையில் பறக்கும் படையினர் வாகனங் களை நிறுத்தி தீவிர சோதனை செய்தனர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் கணவாய்பட்டி கிராமம் ஒத்தக்கடையை சேர்ந்த வேலு என்பவர் வந்த லோடு வண்டியில் ரூ.79,300 உரிய ஆவணங்கள் இன்றி இருந்துள்ளது. பணத்தை கைப்பற் றிய தேர்தல் பறக்கும் படையினர் வ. புதுப்பட்டி பேரூராட்சியின் தேர்தல் அலு வலர் சிவ அருணாச்சலத்திடம் ஒப்படைத் தனர்.
திண்டுக்கல் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் நியமனம்
திண்டுக்கல், பிப்.5- திண்டுக்கல் மாவட்டத்தில், ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 3 நகராட்சி களுக்குட்பட்ட மொத்தம் 75 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக் கும், 23 பேரூராட்சிகளுக்குட்பட்ட மொத்தம் 363 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் என மொத் தம் 486 பதவி இடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதி கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதையொட்டி, திண்டுக்கல் மாவட்ட தேர்தல் பொது பார்வை யாளராக அயலக நல்வாழ்வு நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் ஜெசிந்தா லாஸரஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நகர்ப்புற உள் ளாட்சி தேர்தல் நடத்தை விதி முறைகள் மீறல் மற்றும் புகார்கள் குறித்து தேர்தல் பார்வையாளர் அயலக நல்வாழ்வு நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் ஜெசிந்தா லாஸரஸை, 83003- 42972 என்ற செல்பேசி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் புகார் தெரிவிக்கலாம். (ந.நி.)
திருவில்லிபுத்தூர் நகராட்சியில் 220 வேட்புமனுக்கள் ஏற்பு
திருவில்லிபுத்தூர், பிப்.5- விருதுநகர் மாவட்டம் திரு வில்லிபுத்தூர் நகராட்சி 33 வார்டு களில் போட்டியிட 230 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தி ருந்தனர். சனிக்கிழமையன்று வேட்பு மனு பரிசீலனைக்குப் பின் னர் 220 மனுக்கள் ஏற்றுக் கொள் ளப்பட்டது. எஸ்.கொடிக்குளம் பேரூ ராட்சியில் 15 வார்டுகளில் போட்டி யிட 97 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில், 97 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வத்திராயிருப்பு பேரூராட்சியின் 18 வார்டுகளில் போட்டியிட 97 பேர் மனுத்தாக்கல் செய்தி ருந்தனர். இதில், 97 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வ.புதுப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளில் போட்டியிட 66 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த னர். இதில் 65 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஒரு மனு விசா ரணை நிலுவையில் உள்ளது. சுந்தரபாண்டியன் பேரூராட்சி யில் 15 வார்டுகளில் போட்டியிட 38 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 37 மனுக்கள் ஏற்றக்கொள்ளப்பட்டது. திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பேரூராட்சி யில் 18 வார்டுகளில் போட்டியிட 132 பேர் வேட்புமனு தாக்கல் செய் தனர். இதில் 130 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
விருதுநகர் மாநகராட்சியில் 189 வேட்பு மனுக்கள் ஏற்பு
விருதுநகர், பிப்.5- விருதுநகர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கான தேர்தலில் 189 வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதில் அனைத்து மனுக்களை யும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஏற்றுக் கொண்ட னர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர் தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடை பெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28ஆம் தேதி துவங்கி வெள்ளியன்று வரை பெறப்பட்டது. இந்நிலை யில், சனிக்கிழமையன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில், 43 சுயேட்சை வேட்பாளர்கள், அர சியல் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் மாற்று வேட்பாளர்கள் உட்பட 189 வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்கப்பட்டது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட் டணி சார்பில் 36 வார்டுகளிலும் வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற னர். இதில் திமுக 23 இடங்களி லும், காங்கிரஸ் 11 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 2 இடங்களிலும் போட்டியிடு கின்றன. அதேநேரத்தில், அதிமுக 34 வார்டிலும், பாஜக 29, மக்கள் நீதி மய்யம் 10, அமமுக 6, தேமு திக 3, நாம் தமிழர் கட்சி 2 வார்டு களிலும், சமத்துவ மக்கள் கட்சி 1 வார்டிலும் போட்டியிடுகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 2142 வேட்புமனுக்கள் ஏற்பு
விருதுநகர், பிப்.5- விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற வுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை யொட்டி சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சி கள் மற்றும் 9 பேரூராட்சிகளில் மொத்தம் 2142 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டது. இதில் சிவகாசி மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் 322 பேர் மனுக்களை தாக்கல் செய்ததில், 4 தள்ளுபடி செய்யப்பட்டு, 318 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. அருப்புக்கோட்டையில் உள்ள 36 வார்டுகளில் 210 பேர் மனுத் தாக்கல் செய்தி ருந்தனர். இதில் 2 மனுக்கள் தள்ளுபடி செய் யப்பட்டதையடுத்து 208 மனுக்கள் ஏற்கப் பட்டன. இராஜபாளையத்தில் 42 வார்டு களில் தாக்கல் செய்யப்பட்ட293 மனுக்களில் 285, சாத்தூரில் 24 வார்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட 150 மனுக்களில் 7 போக 143 மனுக்கள் ஏற்கப்பட்டது. திருவில்லிபுத்தூரில் 33 வார்டுகளில் 230 மனுக்களில் 10 தள்ளுபடி செய்யப் பட்டது. 220 மனுக்கள் ஏற்கப்பட்டன. விருது நகரில் 189 மனுக்களும் ஏற்கப்பட்டது. நகராட்சிகளில் மட்டும் 1045 மனுக்கள் ஏற்கப்பட்டது. செட்டியார்பட்டி பேரூராட்சியில் 99 மனுக்களில் 3 தள்ளுபடி செய்யப்பட்டு 96 ஏற்கப்பட்டது. காரியாபட்டியில் 92ல் 91 மனுக்களும், மம்சாபுரத்தில் 15 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 117 மனுக்கள் ஏற்கப்பட்டது. மல்லாங்கிணற்றில் 56 மனுக்களும், ச.கொடிக்குளத்தில் 97 ல் 96 மனுக்களும், சேத்தூரில் 123 மனுக்களும், சுந்தர பாண்டியத்தில் 38 ல் 37ம், வ.புதுப்பட்டியில் 66 மனுக்களும், வத்திராயிருப்பில் 97 மனுக்களும் என மொத்தம் 779 மனுக்கள் ஏற்கப்பட்டன.
தேனி நகராட்சி: அரசியல் கட்சி நிர்வாகிகள் 10 வார்டுகளில் கணவன் -மனைவி போட்டி
தேனி, பிப்.5- தேனி அல்லிநகரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில், 10 வார்டு உறுப்பினர் பதவி களுக்கு அரசியல் கட்சியை சேர்ந்த நிர்வாகி கள் 10 தம்பதி சகிதமாக உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள தேனி அல்லி நகரம், போடி, சின்னமனூர், பெரியகுளம், கம்பம், கூடலூர் ஆகிய 6 நகராட்சிகளில் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. இதனால், அரசியல் கட்சி களின் நிர்வாகிகள் தலைவர் பதவியை குறிவைத்து மாணவிகளை போட்டியிட வைத்துள்ளதோடு, தாமும் அருகில் உள்ள வார்டுகளில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தேனி அல்லிநகரம் நகராட்சியில் திமுக சார்பில் 20 -வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அக்கட்சியின் நகரச் செயலாளர் பாலமுரு கன், 10-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அவரது மனைவி ரேணுப்பிரியா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும், அதிமுக சார்பில் 19-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சண்முகசுந்தரம், 18-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அவரது மனைவி சரஸ்வதி ஆகியோர் போட்டியிடு கின்றனர். அமமுக சார்பில் 16-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அக் கட்சியின் நகரச் செயலாளர் காசிமாயன், 17-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அவரது மனைவி ஜெயா ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேமுதிக சார்பில் 16-வது வார்டு உறுப்பி னர் பதவிக்கு சீனிவாசன், 15-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அவரது மனைவி நளினி, 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு செல்வக்குமார், 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அவரது மனைவி வாசுகி தேவி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மாமியார், மருமகள் வேட்பு மனு: அதி முக சார்பில் 23-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு லட்சுமி, 24-வது வார்டு உறுப்பி னர் பதவிக்கு அவரது மருமகள் சங்கீதா ஆகி யோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
வடுகபட்டியில் 3 சுயேட்சைகள் போட்டியின்றி தேர்வு
தேனி, பிப்.5- வடுகபட்டி பேரூராட்சியில் 3 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகி றார்கள். பெரியகுளம் அருகே வடுகபட்டி பேரூ ராட்சியில் 15 வார்டுகளில் மொத்தம் 45 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை சனிக்கிழமை யன்று நடைபெற்றது. இதில், 1-வது வார்டு முத்துலட்சுமி மற்றும் 10-வது வார்டில் ஜெயராம் என தலா ஒரு சுயேட்சை வேட்பாளர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வார்டுகளில் திமுக, அதிமுக உள்பட எந்த அரசியல் கட்சி களின் சார்பிலும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் இந்த 2 வார்டு கவுன்சிலர் பதவிகள் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகி னர். இதேபோல் 11 வது வார்டில் விமலா என்பவர் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இவரை எதிர்த்து போட்டி யிட்ட வேட்பாளர்கள் சனிக்கிழமையன்று தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். இத னால் 11-வது வார்டிலும் விமலா போட்டி யின்றி தேர்வானார். வடுகபட்டி பேரூராட்சி யில் 3 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர்.
நுண்நிதி நிறுவனத்தில் கணினி திருட்டு
வெம்பக்கோட்டை, பிப்.4- வெம்பக்கோட்டை அருகே நுன்நிதி நிறுவன அலுவலகத்தின் உள்ளே இருந்த கணினி பொருட்கள் மாயமானது. விருதுநகர் மாவட்டம், வெம்பக் கோட்டை அருகே உள்ள பேர்நாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (26). இவர் ஆலங்குளத்தில் நுண்நிதி நிறுவன அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல அலுவல கத்தை பூட்டி விட்டு சென்றுள்ளார். மறு நாள் காலை வந்து பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த கணினி மற்றும் பொருட்கள் மாயமானது தெரிய வந்தது. எனவே, இதுகுறித்து பொன்ராஜ் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசா ரிக்கின்றனர்.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் டிஐஜி ஆய்வு
திருவில்லிபுத்தூர், பிப்.5- விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் உள்ள சுந்தரபாண்டி யம், வ.புதுப்பட்டி, எஸ்.கொடிக்குளம், வத்திராயிருப்பு ஆகிய நான்கு பேரூராட்சி களில் உள்ள வாக்குச் சாவடிகளை வெள்ளியன்று மதுரை சரக டிஐஜி பொன்னி ஆய்வு செய்தார். அப்போது இந்த நான்கு பேரூராட்சி களில் எந்தெந்த வாக்குச் சாவடிகள் பதற்ற மானவை என கேட்டு அறிந்து, அங்கு கூடுதலாக பாதுகாப்பை பலப்படுத்தவும் அறிவுரை வழங்கினார். மேலும் வாக்குச் சாவடிகளில் தேர்தலின்போது எந்தவித சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்காக முன்கூட்டியே பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என்றும் ஆலோ சனை வழங்கினார்.
திருச்செந்தூர் மாசி திருவிழா: பக்தர்களுக்கு அனுமதி
தூத்துக்குடி, பிப்.5- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா கொடியேற்றம், தேரோட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி திரு விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு மாசி திருவிழா பிப்ரவரி 7ம் தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெறவுள்ளது. விழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். கோவில் வளாகம், கடற்கரை, நாழிக்கிணறு பேருந்து நிலையம், திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும் மண்ட பங்களை பார்வையிட்டார். தொடர்ந்து தேர்கள் மற்றும் தேரோட்டம் நடைபெறும் வீதிகளையும் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவில் மாசி திருவிழா விற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. திருவிழாவிற்கு என்னென்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்து சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப் பட்டுள்ளது. சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் செல்லும் வரிசை முறைப்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் முதலுதவி மைய மும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பக்தர்கள் கடலில் நீராடும்போது ஆழ மான பகுதிக்கு செல்லாமல் இருக்க கட லில் தடுப்பு மிதவைகள் அமைக்கப்படும். மேலும் எல்லா நிகழ்ச்சிகளிலும் பக் தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப் பட்டு உள்ளது என்றார்.
கேஸ் ஸ்டவ் வெடித்து தலைமைக் காவலர் பலி
தூத்துக்குடி, பிப்.5- தூத்துக்குடி அருகே கேஸ் ஸ்டவ் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயம் அடைந்த தலைமைக் காவலர் பரி தாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி அருகேயுள்ள ஏ.தங்கம்மாள்புரம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் மகன் சங்கர் கணேஷ் குமார் (29). தமிழ்நாடு காவல்துறை மணி முத்தாறு பட்டாலியன் 9வது அணியின் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஜனவரி 17ம் தேதி வீட்டில் கேஸ் ஸ்டவ் பற்றவைத்தபோது எதிர்பாராதவிதமாக ஸ்டவ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் அருப்புக் கோட்டை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பல னின்றி வெள்ளியன்று உயிரிழந்தார்.
குமரி முனையில் குடியரசு தின ஊர்தி
நாகர்கோவில், பிப்.5- ஒன்றிய அரசினால் குடியரசு தின அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி குமரி முனை வந்தடைந்தது. மாணவர்களும் பொதுமக்களும் ஆர்வமுடன் பார்வை யிட்டதோடு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சனிக்கிழமையன்று கன்னியா குமரிக்கு வந்த குடியரசு தின அலங்கார ஊர்தியில் விடுலைப் போராட்டத்தின் பல்வேறு வரலாற்றுக் காட்சிகள் தத்ரூ பமாக இடம்பெற்றுள்ளன. இதனை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் த.மனோ தங்கராஜ், நாடா ளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டு மலர் தூவி வரவேற்றனர். வேலு நாச்சியார், மருது பாண்டி யர்கள், வீர மங்கை குயிலி போன்ற துவக்க கால தமிழ் நாட்டு விடுதலை போராட்ட வீரர்களையும் அக்கால வர லாற்றையும் உள்ளடக்கிய இந்த அலங்கார ஊர்தியினை மாணவ, மாண வியர் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
மனைவியை கொலை செய்த கணவன் கைது
கடமலைக்குண்டு, பிப்.5- தேனி மாவட்டம், கடமலைக் குண்டு அருகே தனிப்பாறை பகு தியை சேர்ந்தவர் கணேசன் (55). இவருடைய மனைவி அம்சக் கொடி (48). இவர்களுடைய மகன் மணிமாறன் பெங்களூருவில் தனி யார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கணேசன் மற்றும் அவரு டைய மனைவி இருவரும் அவர் களுக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். மதுப் பழக்கத்திற்கு அடிமையான கணேசன் அடிக்கடி மனைவி யிடம் தகராறில் ஈடுபட்டு வந் துள்ளார். இந்நிலையில், கடந்த 5 நாட்க ளுக்கு முன்பு மதுபோதையில் வந்த கணேசன் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரத்தில் விறகு கட்டையால் தாக்கி மனைவியை கொலை செய்தார். பின்னர் இறந்துபோன மனைவியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீட்டிற்குள்ளேயே வைத்துள் ளார். மேலும் தன்னுடன் சண்டை போட்டு மனைவி வீட்டை விட்டு சென்று விட்டதாக உறவினர்களி டம் தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில் சாக்கு மூட்டையிலிருந்து துர்நாற்றம் வெளியேறியுள்ளது. இதனால் மனைவியின் உடலை தோட்டத்தி லேயே யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட முடிவெடுத்தார். கோழிகள் அடைத்து வைக் கும் தொட்டிக்குள் உடலை மூடி வைத்து விட்டு தோட்டத்தில் பள்ளம் தோண்டும் பணிகளில் ஈடுபட தொடங்கினார். அப்போது பக்கத்து தோட்டத்தில் இருந்த அம்சக்கொடியின் உறவினர்கள், கணேசன் நடவடிக்கைகள் மீது சந்தேகப்பட்டு அருகில் சென்று பார்த்தனர். அப்போது கோழி கூண்டிற்குள் உடல் முழுவதும் அழுகிய நிலையில், அம்சக் கொடியின் உடல் இருந்துள்ளது. இதனையடுத்து உறவி னர்கள் மயிலாடும்பாறை காவல் துறையினரிடம் தகவல் தெரி வித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் கணேசனை கைது செய்து, அம்சக்கொடி யின் உடலை பிரேத பரிசோத னைக்காக தேனி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேகமலை அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
கடமலைக்குண்டு, பிப்.5- தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழுவில் மேகமலை அருவி அமைந்துள்ளது. கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் மேக மலை அருவிக்கு வர வனத்துறையினர் தடை விதித்தனர். இதற்கிடையே கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் அனுமதி வழங் கப்பட்ட நிலையில், மேகமலை அருவியில் மட்டும் 2 ஆண்டுகளாக தொடர்ந்து தடை நீடித்து வந்தது. எனவே மேகமலை அருவி யில் தடையை நீக்க மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேகமலை அருவிக்கு சுற்றுலா பய ணிகள் வர விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப் பட்டது. ஞாயிறன்று விடுமுறை தினம் என்ப தால் அருவிக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வர வாய்ப்புகள் உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக வெள்ளியன்று மேகமலை வனச்சர கர் சதீஷ்கண்ணன் மற்றும் வனத்துறை யினர் மேகமலை அருவியில் பாதுகாப்பு நட வடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற் கொண்டனர்.
வாடகைக் கார்களை அடகு வைத்து மோசடி தீயணைப்பு வீரர் உட்பட 3 பேர் மீது வழக்கு
விருதுநகர், பிப்.5- வாடகைக்கு கார்களை எடுத்து வந்து, திரும்ப வழங்காமல் அதை அடகு வைத்து மோசடி செய்த தீயணைப்பு வீரர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. சிவகாசி மாரனேரியை சேர்ந்தவர் கார்த்திக் (24). இவருக்கு சொந்தமான காரை செந்தில்குமார் என்பவர் வாடகைக்கு எடுத்துச் சென்றார். ஆனால், 1 மாதமாகி யும் காரை அவர் திருப்பி கொடுக்கவில்லை. மேலும் கார்த்திக்கின் நண்பர் அய்யனார், கருப்பசாமி ஆகியோரது கார்களையும் செந்தில்குமார் வாடகைக்கு எடுத்துள்ளார். அந்த கார்களையும் திருப்பித்தர வில்லை. எனவே, கார்த்திக் உள்பட 3 பேரி டமும் விசாரித்தபோது, விருதுநகர் தீய ணைப்பு துறை வீரர் திருப்பதியிடம் கார்கள் இருப்பது தெரியவந்தது. இதுபற்றி கேட்ட போது செந்தில்குமார் அந்த கார்களை தான் அடகு வைத்து பணம் பெற்றிருப்பதாக கூறி யுள்ளார். மேலும் கார்களை தரும்படி கேட்டபோது செந்தில்குமார், திருப்பதி ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படு கிறது. எனவே, கார்த்திக், சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் செந்தில்குமார், அவரது தம்பி டேக்கா பாண்டி, தீயணைப்பு வீரர் திருப்பதி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ஸ்மார்ட் சிட்டி வணிக வளாகத்தில் கடைகள் ஒதுக்க வேண்டும் மாநகராட்சியை வியாபாரிகள் முற்றுகை
தூத்துக்குடி, பிப்.5- தூத்துக்குடியில் கட்டப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி வணிக வளாகத்தில் ஏற்கனவே கடை வைத்திருந்த வர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில அமைப்பா ளர் தெர்மல் ராஜா, தூத்துக்குடி ஹோட்டல் உரிமையா ளர் சங்க செயலாளர் பாலமுருகன் மற்றும் வியாபாரி கள் மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது: தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த 27 ஆண்டுகளாக கடை நடத்தி வந்தோம். தற்பொழுது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வணிக வளாகம் கட்டப்படு வதால். மாநகராட்சி ஒதுக்கிய இடத்தில் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகிறோம். இந்நிலையில் வணிக வளாக பணிகள் முடி வடையாமலும், தேர்தல்கால நேரத்திலும், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதும், அவசரகதியில், சட்டவிரோதமாக அந்த வணிக வளாகத்திற்கு ஏலம் மற்றும் டெண்டர் நடை பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானது எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க கூடிய வகையில் மாநக ராட்சி நிர்வாகம் செயல்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி வணிக வளாகத்தில் ஏற்கனவே கடை வைத்திருந்தவர் களுக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 249 வார்டுகளில் சிபிஎம் வேட்புமனு தாக்கல்
நாகர்கோவில், பிப்.5- கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 அன்று நடக்கவி ருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி 4 (வெள்ளியன்று) நிறைவடைந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மொத்தம் 249 வார்டு களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நாகர்கோவில் மாநகராட்சியில் 9 வார்டுகளிலும், கொல்லங்கோடு, குழித்துறை, குளச்சல், பத்மநாபபுரம் ஆகிய நான்கு நகராட்சிகளில் 55 வார்டு களிலும், 51 பேரூராட்சிகளில் 185 வார்டுகளிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சிபிஎம் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 2ஆவது வார்டில் பி.சுரேஷ், 8 ஆவது வார் டில் கே.மோகன், 9 வது வார்டில் எஸ்.அந்தோணி, 11 ஆவது வார் டில் ஏ.கவிதா, 16 ஆவது வார்டில் எஸ்.ஏசுதாஸ், 20 ஆவது வார்டில் ஜே.அம்பிகா, 22 ஆவது வார்டில் பி.ராஜநாயகம், 26 ஆவது வார்டில் ஜே.பாஸ்காமேரி, 50 ஆவது வார்டில் டாக்டர்.எஸ்.கிருஷ்ண பிரசாத் ஆகியோர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். கொல்லங்கோடு நகராட்சி யில் 33 வார்டுகளிலும், குழித் துறை நகராட்சியில் 14 வார்டுகளி லும், பத்மநாபபுரம் நகராட்சியில் 7 வார்டுகளிலும், குளச்சல் நக ராட்சியில் ஒரு வார்டிலும் சிபிஎம் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். பளுகல் பேரூராட்சியில் 18, களியக்காவிளை 15, பாகோடு 18, இடைக்கோடு 18, அருமனை 8, கடையாலுமூடு, திற்பரப்பு தலா 12, திருவட்டார் 11, கோதநல்லூர் 9, வில்லுக்குறி 7, ஆற்றூர் 6, பொன்மனை, குலசேகரம் தலா 5, பாலப்பள்ளம் 9, கிள்ளியூர், மணவாளக்குறிச்சி தலா 4, திங்கள் நகர், மண்டைக்காடு, வெள்ளிமலை, குமாரபுரம், வாள்வச்சகோஸ்டம் தலா 3, கணபதிபுரம், ரீத்தாபுரம், கருங் கல், திருவிதாங்கோடு, கீழ் குளம், வேர்கிளம்பி ஆகிய பேரூ ராட்சிகளில் தலா 2 வார்டுகளிலும் புத்தளம், கல்லூக்கூட்டம், விளவூர், மருங்கூர், உண்ணா மலைக்கடை, நல்லூர் ஆகிய பேரூராட்சிகளில் தலா ஒரு வார்டு களில் சிபிஎம் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.