tamilnadu

img

லயோலா கல்லூரி காட்சித் தகவலியல் துறை தலைவர் ஏ.இருதயராஜ்

மூத்த பத்திரிகையாளர் ஆர்.நூருல்லா  எழுதிய “வரலாற்றுப் பார்வையில் இந்தியச் செய்தியாளர் சங்கங்கள்” நூல் வெளியீட்டு விழா மூத்த பத்திரிகையாளர் மயிலை பாலு தலைமையில் சென்னையில் புதனன்று (ஜூலை 27) நடைபெற்றது. லயோலா கல்லூரி காட்சித் தகவலியல் துறை தலைவர் ஏ.இருதயராஜ் வெளியிட   பிரைம் பாய்ண்ட் ஸ்ரீனிவாசன் பெற்றுக் கொண்டார். சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் எல்.ஆர்.சங்கர், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன், எம்.சி.மோகன்தாஸ், என்.அமானுல்லா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிறைவாக நூலாசிரியர் ஆர்.நூருல்லா ஏற்புரை வழங்கினார். முன்னதாக பாரதி புத்தகாலயம் மேலாளர் நாகராஜன் வரவேற்றார்.