புதுதில்லி, பிப்.14- வாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் எண்ணு டன் இணைப்பது வாக்காள ரின் தன்விருப்பத்தின் அடிப்படையிலானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பி.ஆர். நட ராஜன் கேட்டிருந்த கேள் விக்கு அமைச்சர் பதில ளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத் தின்போது, பி.ஆர். நட ராஜன், 2021 தேர்தல் சட் டங்கள் (திருத்தச்) சட்டமுன் வடிவு அமலுக்கு வந்ததிலி ருந்து, வாக்காளர் அடை யாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்தது பற்றிய விபரங்கள் என்ன என்றும், வாக்காளர் அடை யாள அட்டையை, ஆதார் எண்ணுடன் இணைத்தல் என்பது தன்விருப்பப்படி யான ஒன்றா என்றும், இந்த இணைத்தல் என்பது, சம் பந்தப்பட்ட வாக்காளர்களி டமிருந்து ஒப்புதல் பெற்ற பின் செய்யப்படுகிறதா என்றும், சம்பந்தப்பட்ட வாக் காளர் ஒப்புதலை திரும்ப பெற்றால் இணைப்பு நீக் கப்படுமா என்றும், அப்படி யெனில், இந்த ஒப்புதல்கள், வாக்காளர்களிடமிருந்து எந்த முறையில் பெறப்படு கிறது என்று குறிப்பிட்டுள்ள விபரங்கள் தேவை என்றும் கேட்டிருந்தார்.
இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச் சர் கிரண் ரிஜிஜு கூறியதா வது: தற்போதுள்ள அல்லது வருங்கால வாக்காளரிடம், அடையாளத்தை நிறுவு தல் பொருட்டு, வாக்காள ரின் தன்விருப்ப அடிப்படை யில் ஆதார் எண்ணை வழங்கு மாறு கேட்டிட தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு, 2021 தேர் தல் சட்டங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு அனுமதி அளித்துள்ளது. 04-07-2022 ஆம் தேதியிட்ட, இந்திய தேர் தல் ஆணையத்தின் அறி வுறுத்தல்படி, 1.8.2022 இலிருந்து, வாக்காளர்களின் தன்விருப்ப அடிப்படையில், தற்போதுள்ள அல்லது வருங்கால வாக்காளர்களிட மிருந்து, ஆதார் எண்ணை பெறுவதற்கான திட்ட மொன்று, அனைத்து மாநி லங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் துவங்கப் பட்டுள்ளது. ஆதார் எண்ணை வாக்காளர் அடை யாள அட்டையுடன் இணைத் தல் என்பது, வாக்காளர் களின் தன்விருப்ப அடிப்ப டையிலானது. மற்றும் படி வம் 6பி-யில், ஆதார் அங்கீ காரத்திற்காக வாக்காளர் களிடமிருந்து ஒப்புதல் பெறப்படுகிறது. மேலும் வாக்காளர் களின் ஒப்புதலை திரும்ப பெறுவதற்கான ஏற்பாடுகள் ஏதுமில்லை. இவ்வாறு அமைச்சர் பதி லளித்துள்ளார். (ந.நி.)