tamilnadu

img

கேரள உள்ளாட்சி இடைத்தேர்தலில் இடதுசாரி அலை

திருவனந்தபுரம், டிச.8- கேரளத்தில் 32 உள்ளாட்சி அமைப்பு களுக்கு செவ்வாய்க்கிழமை நடை பெற்ற தேர்தலில் இடதுசாரிகளுக்கு பெரும் பெற்றி கிடைத்துள்ளது. இடது ஜனநாயக முன்னணி 17 வார்டுகளில் வெற்றி பெற்றது. இதில் மூன்று வார்டு கள் யுடிஎப்பிடமிருந்து கைப்பற்றியதா கும். யுடிஎப் 13 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. திருவனந்தபுரம், பாலக்காடு, கோட்டயம் மாவட்டங்களில் காங்கிரஸ் தனது தொகுதிகளை இழந்தது. கொல் லம் மாவட்டத்தில் பாஜக முன்பு வெற்றி பெற்ற இடத்தை இப்போது இழந்தது. இடுக்கியில் ஒரு வார்டில் ஒரு ஓட்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது தான் பாஜகவுக்கு கிடைத்துள்ள ஒரே ஆறுதலாகும். மற்ற இடங்களில் பாஜக வெற்றி பெறவில்லை. எல்டிஎப், பாஜக முன்பு வெற்றிபெற்றிருந்து தலா ஒரு வார்டில் யுடிஎப் வெற்றி பெற்றது.

மாவட்ட பஞ்சாயத்தில் மூன்றுக்கு மூன்றும் எல்டிஎப்

பாலக்காடு மாவட்ட பஞ்சாயத்து ஸ்ரீகிருஷ்ணாபுரம் கோட்டத்திற்கு நடந்த இடைத்தேர்தலில் 9270 வாக்கு வித்தியா சத்தில் எல்டிஎப் வெற்றிபெற்றது. இங்கு யுடிஎப் சார்பில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் கே.ஸ்ரீதரன் 21,913 வாக்கு கள் பெற்றார். பி.கிரிஷன் (யுடிஎப்) - 12,643 வாக்குகளும், கேவி ஜெயன் (பாஜக) 840 வாக்குகளும் பெற்றனர். எல்டிஎப்பின் கே.பிரேம்குமார் சட்ட மன்ற உறுப்பினரானதை அடுத்து இங்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்ற ஸ்ரீதரன் வெள்ளிநேழி ஊராட்சி தலைவராக இருந்தபோது, மாநில அள வில் பல விருதுகளை பெற்றுள்ளார். தற்போது மாவட்ட பஞ்சாயத்து கட்சி நிலை: எல்டிஎப்-26. யுடிஎப்-3. இதுபோல், கோழிக்கோடு மாவட்ட ஊராட்சியின் நன்மண்டா பிரிவில் எல்டிஎப் வேட்பாளர் ரசியா தோட்டாய் அமோக வெற்றி பெற்றார். அவர் 6753 வாக்குகள் வித்தியாசத்தில் யுடிஎப்பின் கே.ஜமீலாவை தோற்கடித்தார். கானத் தில் ஜமீலா சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவி யை ராஜினாமா செய்தார். அதை யொட்டி இங்கு இடைத்தேர்தல் நடந்தது. ரசியா தோட்டாய் மாதர் சங்கத்தின் கக் கோடி பகுதி செயலாளராகவும், சிபிஎம் பகுதிக் குழு உறுப்பினராகவும் உள்ளார். ஆலப்புழா மாவட்ட பஞ்சாயத்து அரூர் கோட்டத்தில் பதிவான வாக்கு களின் எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் அனந்து ரமேசன் 2140 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அரூ ரில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் டெலீமா எம்எல்ஏ  ஆக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொட ர்ந்து இடைத்தேர்தல் நடைபெற்றது.

மாநகராட்சியில்  இரண்டுக்கு இரண்டு

தேர்தல் நடந்த திருவனந்தபுரம் மற்றும் கொச்சி மாநகராட்சி வார்டு களிலும் எல்டிஎப் வெற்றி பெற்றது. திரு வனந்தபுரம் மாநகராட்சியின் வெட்டு காடு வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கிளினெஸ் ரொசா ரியோ 1490 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் சிஐடியு அகில  இந்திய கவுன்சில் உறுப்பினராகவும் மீன வர் கூட்டமைப்பு மாநிலத் தலைவராக வும் உள்ளார். கொச்சி மாநகராட்சி 63ஆவது டிவி சன் காந்திநகரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பிந்து சிவன் வெற்றி பெற்றார். அவர் யுடிஎப் வேட்பாளர் பிடி  மார்ட்டினை 687 வாக்குகள் வித்தியா சத்தில் தோற்கடித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலராக இருந்த கே.கே.சிவன் காலமானதால் ஏற்பட்ட வெற்றிடத்தில் தேர்தல் நடைபெற்றது. கடந்த முறை எல்.டி.எப் 115 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது.

ஒன்றிய பஞ்சாயத்தில் நாலுக்கு நாலும் எல்டிஎப்

நான்கு ஒன்றிய பஞ்சாயத்துகளுக் கான தேர்தல்களிலும் எல்டிஎப் ஆதிக் கம் செலுத்தியது. திருவனந்தபுரம் சிறயின்கீழ் ஒன்றிய பஞ்சாயத்து இடைக்கோடு பிரிவில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆர்.பி.நந்து ராஜ் 463 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இப்பகுதியை பிரதி நிதித்துவப்படுத்திய ஓ.எஸ்.அம்பிகா (சிபிஎம்) அட்டிங்கல் சட்டமன்ற தொகு தியில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. கடந்த தேர்தலில் எல்டிஎப் 1548 வாக்கு கள் பெரும்பான்மை பெற்றிருந்தது. போத்தன்கோடு பகுதியில் இருந்து சிபிஎம்மின் மலையில்கோணம் சுனி 1630 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெ டுக்கப்பட்டார். ஒன்றிய வளர்ச்சி நிலைக் குழுத் தலைவராக இருந்த சிபிஎம்மைச் சேர்ந்த எம்.ஸ்ரீகண்டன் மறைவைத் தொடர்ந்து இங்கு இடைத்தேர்தல் நடை பெற்றது.

திருச்சூர் மாவட்டம் மத்திலகம் ஒன்றிய பஞ்சாயத்து, அழிக்கோடு 10 ஆவது வார்டில் எல்டிஎப் வேட்பா ளர் நவுஷாத் கருகப்பாடத்து 1953 வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் எல்டிஎப்பின் ஷாயி அய்யரில் 1613 வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற்றார். பாலக்காடு குழல்மண்டம் தொகுதி சுங்கமண்டம் கோட்டத்தில் எல்டிஎப் வேட்பாளர் சோம தாஸ் வெற்றி பெற்றார். ஏற்கனவே எல்டிஎப்பில் வெற்றிபெற்ற சிபிஎம் மாத் தூர் உள்ளூர் கமிட்டி உறுப்பினரான இ.ஹரிதாசன் இறந்ததைத் தொடர்ந்து இங்கு தேர்தல் நடைபெற்றது.

நகராட்சியில் மூன்றில் இரண்டு

மூன்று நகராட்சிகளில் உறுப்பினர் களுக்கு நடந்த இடைத்தேர்தலில் யுடிஎப் இரண்டு இடங்களை தக்க வைத்துக் கொண்டது. திருச்சூர் மாவட் டம் இரிஞ்ஞாலக்குடா நகராட்சி சலம் பேட் கோட்டத்தில் யுடிஎப் வேட்பாளர் மினி ஜோஸ் 71 வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற்றார். காசர்கோடு மாவட்டம் காஞ்சங்காடு நகராட்சியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் ஒரே இடத்தை தக்கவைத்துக் கொண் டது. யுடிஎப் வேட்பாளர் கே.கே.பாபு 116 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பிரவம் நகராட்சி 14ஆவது கோட்டத் திற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் எல்.டி.எப் வேட்பாளர் டாக்டர். அஜேஷ் மனோகர் (சிபிஎம்) 26 வாக்குக ள் வித்தி யாசத்தில்  வெற்றி பெற்றார். எல்டிஎப்- ஆளும் பிரவம் நகராட்சியின் 27 வார்டு களில் எல்டிஎப் மற்றும் யூடிஎப் தலா 13 இடங்களைக் கொண்டிருந்தன. இடைத் தேர்தல் வெற்றியின் மூலம் எல்டிஎப் தனது ஆட்சியை உறுதிப்படுத்தியது. 20 கிராம பஞ்சாயத்து வார்டுகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் மலப் புறம் மாவட்டத்தில் மட்டும் 5 வார்டுகள் உட்பட யுடிஎப் 12 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. எல்டிஎப் வேட்பாளர்கள் 7 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். உள்ளாட்சி பிரதிநிதிகள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப் பட்ட தையடுத்து இடைத்தேர்தல் நடந்த மூன்று மாவட்ட பஞ்சாயத்து டிவி சன்கள் உட்பட ஐந்து இடங்களிலும் எல்டிஎப் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.