சென்னை, ஜன.25- ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகன (ட்ரோன்) கழகத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தி மையத்தை திறந்து வைத்தார். இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு:- உயர்கல்வித் துறை சார்பில் நடை பெற்ற நிகழ்ச்சியில், அண்ணா பல் பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து 10 கோடி ரூபாய் மதிப் பீட்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தொடங்கி வைத்தார்.
2021-2022ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “மற்றுமொரு புதிய முன்மாதிரி முயற்சியாக, ஆளில்லா விமானங்களுக்கென தமிழ்நாடு ஆளில்லா விமானக் கழகம், அண்ணா பல்கலைக்கழக சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்படும் என்றும், இந்நிறுவனம், தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலும் உள்ள அரசு சார்ந்த முகமைகள் ஆளில்லா விமான ங்களைப் பயன்படுத்துவதில் உறு துணையாக இருக்கும்” என்றும் அறிவிக் கப்பட்டது. அதன்படி, ஆளில்லா விமானங் களை, பேரிடர் மேலாண்மை, விவசா யம், கட்டுமான கண்காணிப்பு, வரி திட்ட மிடல், சுகாதாரம், வானவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் போன்ற அரசு துறைகளின் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதற்காக சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்ப நிறுவத் துடன் இணைந்து தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகம் தோற்றுவிக்கப் பட்டுள்ளது. சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்ப நிறுவன வளா கத்தில் உள்ள டாக்டர் கலாம் மேம்பட்ட ஆளில்லா விமான ஆராய்ச்சி மையமானது சமூக பயன்பாடுகளுக் கான ஆளில்லா விமான வடிவமைப்பு மற்றும் மேம்பாடு குறித்த திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. மேலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப் பட்டுள்ள 1 மெகாவாட் சூரிய மின்சக்தி மையத்தையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் க.பொன்முடி, மா. சுப்பிரமணியன், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.