திருவனந்தபுரம், பிப்.3 - கேரளா செழிப்பிலும் வளர்ச்சியிலும் மீண்டும் முன்னேற்ற பாதைக்கு திரும்பி யுள்ளதாக நிதியமைச்சர் கே.என்.பால கோபால் கூறினார். கொரோனா, ஓகி போன்ற சவால்களை கேரளா துணிச்சலு டன் சமாளித்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார். பினராயி விஜயன் தலைமையிலான அரசின் இரண்டாவது முழு பட்ஜெட்டை வெள்ளியன்று கேரள சட்டப் பேரவையில் நிதியமைச்சர் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்: விலைவாசி உயர்வு அச்சுறுத்தலை சமாளிக்க பட்ஜெட்டில் 2000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ரப்பர் மானியத்திற்கு 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இந்த ஆண்டு மாநிலத்தின் வருவாய் ரூ.85,000 கோடியாக அதிகரித்துள்ளது. அதிக கடன் வாங்கும் நிதி நிலையில் கேரளா உள்ளது. அரசு துறைகள் ஆண்டு அறிக்கை தயா ரிக்க வேண்டும். இதற்கான கண்கா ணிப்பு பொறுப்பு ஐஎம்ஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் நிதிக் கொள்கை யானது, வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடன் வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. கேரளா கடன் நெருக்கடியில் இல்லை, கேரளாவின் கடன் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மையங்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. டெக்னோ பூங்காவில் டிஜிட்டல் அறிவியல் பூங்கா அமைக்கப்படும். வேளாண் தொழில் தொடங்கும் நிறு வனங்களுக்காக ‘மேக் இன் கேரளா’ திட்டம் உருவாக்கப்படும். உயிரியல் பூங்காவுக்கு ரூ.15 கோடியும், கிராபென் உற்பத்திக்கு ரூ.10 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கு மூலதனத்தை உயர்த்த வட்டி நிவாரணம். விழிஞ்ஞம் திட்டம் தொடர்பான வளர்ச்சிக்கு ரூ.60,000 கோடி. விழிஞ்ஞம் ரிங் ரோடுக்கு ரூ.1000 கோடி, மேக் இன் கேரளாவுக்கு ரூ.1000 கோடி. சிறந்த திட்டங்களை செயல்படுத்த ரூ.100 கோடி. கோவளம், குட்டநாடு, குமரகத்தில் சுற்றுலா வளர்ச்சி. சுற்றுலா தலங்களில் விடுமுறை இல்லங்களில் இருந்து வேலை செய்ய ரூ.10 கோடி. மாநிலத்தில் 66,000 மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் இடம்பெற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.50 கோடி, விமான கட்டணத்தை குறைக்க ரூ.15 கோடி கார்பஸ் நிதி. வனவிலங்கு தாக்குதல்களை தடுக்க ரூ.50 கோடி இழப்பீடு உள்ளிட்ட திட்டங்கள். பயிர்க் காப்பீட்டுக்கு ரூ.30 கோடி என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.