tamilnadu

img

“கேரளாவின் பொதுநல அமைப்பு நாட்டிற்கே முன்மாதிரி”

கொச்சி, ஜுலை 26- நாட்டிற்கு முன்மாதிரியான நலத்திட்டங்களை கேரளம் கொண்டுள்ளது என்றும், கேரளம் அனைத்து துறைகளிலும் நலன்சார் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் அம்மாநில சட்டம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் தெரிவித்தார். இளம் வழக்கறிஞர்கள் உதவித்தொகை பெறும் பயனாளிகள் சங்கமத்தையும் உதவி மையத்தையும் துவக்கி வைத்து பேசிய அவர்,  “நலத்திட்ட நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகள் அதிக வரி விகிதங்களைக் கொண்டிருக்கின்றன. அங்கெல்லாம் வருவாயில் 50 சதவிகிதம் வரை வரி விதிக்கப்படுகிறது. ஆனால், கூடுதல் வரிச்சுமையை விதிக்காமல், நலத்திட்டங்களை கேரளா செயல்படுத்துகிறது” என்றார். வருவாய் குறைவதால் வழக்கறிஞர்கள் வேலையை விட்டு வெளியேறுவது அதிகரித்து வருகிறது. தகுதி வாய்ந்த இளம்  வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கு தல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கு வதன் மூலம் இந்நிலையை போக்க முடியும் என  நம்புவதாக பி.ராஜீவ் தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு அகில இந்திய வழங்கறிஞர்கள் சங்க தேசிய செயற்குழு உறுப்பினர் லதா டி தங்கப்பன் தலைமை வகித்தார்.