tamilnadu

கொரோனா தொற்றால் கே.டி.ராஜேந்திரபாலாஜி விசாரணை ஒத்தி வைப்பு

விருதுநகர்,ஜன.31- ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு உச்ச  நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி யுள்ளது. அதையடுத்து திருச்சி மத்திய  சிறையில் அடைக்கப்பட்டிருந்த கே.டி.ரா ஜேந்திர பாலாஜி ஒரு வார சிறைவாசத் திற்குப் பிறகு கடந்த 13 ஆம் தேதி வெளியே  வந்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்து ழைப்பு தருவதாக கே.டி.ராஜேந்திர பாலாஜி தரப்பில் அவரது வழக்கறிஞர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவ லகத்தில் கடிதம் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த 28ஆம் தேதி மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் சம்மன்  அனுப்பினர். அதையடுத்து விருதுநகரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவல கத்தில் கே.டி.ராஜேந்திர பாலாஜி திங்களன்று(ஜன.31) ஆஜரானார். அப்போது கடந்த 23 ஆம் தேதி தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் தொடர்ந்து அதற்காக சிகிச்சை பெற்று  வருவதாகவும் அதிகாரிகளிடம் தெரி வித்தார். அதோடு, மீண்டும் பரிசோதனை செய்துள்ளதாகவும் தெரிவித்தார். பரிசோதனை அறிக்கையில் கொரோனா இல்லை என சான்றிதழ் பெற்ற பின்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் அறி வுறுத்தினர். அதையடுத்து “கொரோனா தொற்று இல்லை என சான்று வந்தபின்பு எப்போது அழைத்தாலும் தான் மாவட்ட குற்றப் பிரிவில் விசாரணைக்கு ஆஜராவேன்” என கே.டி.ராஜேந்திர பாலாஜி கடிதம் அளித்தார். மேலும், சம்மன் அனுப்பும் பொழுது விசாரணைக்கு ஆஜராக வேண் டும் என்று கூறி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் அவரை அனுப்பிவைத்தனர்.