மதுரை, ஜூன் 12- திடீரென பணிநீக்கம் செய்து 136 தொகுப்பூதிய ஊழியர்களின் வாழ்வா தாரத்தை பறித்துள்ளது மதுரை காம ராசர் பல்கலைக்கழக நிர்வாகம். மீண்டும் பணி வழங்கக்கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தொகுப்பூதியத்தில் பணி யாற்றிய துப்புரவுப்பணியாளர், ஓட்டு நர், கணினி மென்பொருள் பராமரிப்பா ளர், இளநிலை உதவியாளர், தோட்டம் பராமரிப்பவர் உட்பட 136 பேரை திடீரென வாய்மொழி உத்தர வின்பேரில் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி பணிநீக்கம் செய்தனர். ஒரு உத்தரவால் இவர்களது வாழ்வா தாரமே கேள்விக்குறியானது.இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், மீண்டும் பணி வழங்குமாறு கோரிக்கை முன்வைத்தனர். ஆனால் நடவடிக்கை இல்லாததால் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழி யர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் பணி நீக்கம் செய்யப் பட்ட 136 ஊழியர்களுக்கும் ஒரு முக்கிய பங்கு உள்ளது என்று கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் ஒரு மாதத்தில் 20 நாட்கள் மட்டுமே பணி செய்வதற்கான ஊதியம் வழங்கப் பட்டு வந்தது. உதாரணமாக ஒரு நப ருக்கு அவருடைய வேலையைப் பொறுத்து ஊதியம். இந்த ஊழி யர்களில் அதிகபட்ச ஊதியமே ரூ.10 ஆயிரம் மட்டுமே. இந்த 20 நாட் களில் முக்கிய வேலை காரண மாகவோ அல்லது உடல் நிலை சரி யில்லை என்று விடுமுறை எடுத்தால் அந்த நாளுக்கான சம்பளம் கிடை யாது. அதே நேரத்தில் இருபது நாட் களுக்கு மேல் எத்தனை நாள் பணி யாற்றினாலும் அதற்கும் ஊதியம் கிடையாது. இப்படித்தான் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த னர். குறைந்தபட்ச ஊதியம் ரூ.6 ஆயி ரம் முதல் 7 ஆயிரம் வரை வாங்கு பவர்களும் உள்ளனர்.
மனஉளைச்சலில் ஊழியர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் கூறுகையில், பல்கலைக் கழக த்தின் உள்ளே வேலை பார்க்கும் ஆசிரி யர், ஆசிரியரல்லாதோர் மற்றும் ஓய்வு பெற்றோர் உட்பட அனைவருக்கும் ஒரு மாதச் சம்பளம் பத்தரை கோடி ரூபாய் வருகிறது. ஆனால் 136 பணியாளர் களுக்கு ரூ.10 லட்சத்திற்கும் கீழ் தான் வருகிறது. ஆனால் எங்களை கூடுதல் ஊழியர்கள் என்று கூறி வெளியேற்றி விட்டார்கள். பல்கலைக்கழகத்தில் 903 பணியிடங்களில் 870-க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்தோம். இன் னும் காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆனால் 136 பேர் கூடுதல் ஊழியர் கள் என்று கூறி பணி நீக்கம் செய்துள்ள னர். இந்த போராட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகள், கணவனால் கை விடப்பட்டவர்கள் 2 நபர்கள், விதவைப் பெண்கள் 2 பேர் உள்ளனர். 136 பேரில் துப்புரவு பணியாளர்கள் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படித்துள்ள னர். மற்ற பல ஊழியர்கள் பட்டதாரி கள். பிஹெச்டி படித்தவர்கள் 2 பேர் உள்ளனர். இதில் குறிப்பாக ராமு என்ப வர் இன்ஜினியர் பிரிவில் சமையல் உத வியாளராக இருந்தவர். பணி நீக்கத் தால் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டு 30 நாட்களுக்கும் மேலாக சாப்பிடாமல் இருந்தார். இதனால் அவர் உடல்நிலை திட உணவுகளை ஏற்க மறுத்துவிட்டது. தற்போது திரவ உணவை அவர் உட்கொள்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து தற்போது அவரது இல்லத் தில் ஓய்வில் உள்ளார். மற் றொரு மாற்றுத்திறனாளி ஆனந்த் என்பவர் போராட்டத்தில் ஈடுபட்ட போது மன உளைச்சல் ஏற்பட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். காவல்துறை யினரும் சக ஊழியர்களும் தடுத்து நிறுத்தினர். முதல் பத்து நாட்கள் உள்ளி ருப்பு போராட்டத்தில்தான் ஈடுபட்டி ருந்தோம். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் இரவில் காவல்துறையை வைத்து தரக்குறைவாக பேசி குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றி னர். காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் அராஜகப் போக்கு இருந்தன என்று பெண்கள் மனம்நொந்து கூறினர்.
முதல்வர் தலையிட வலியுறுத்தல்
பல்கலைக்கழக துணைவேந்தரி டம் இவர்கள் கேட்டபோது ,முன்னாள் பதிவாளர் மற்றும் சிண்டிகேட் 136 பேரை பணி நீக்கம் செய்யக்கோரி ஆர்டரை ரெடியாகவைத்திருந்தார்கள் .நான் வந்தவுடன் கையெழுத்திட்டேன் என்று துணைவேந்தனர் சாதாரணமாக கூறுகிறார். துணைவேந்தர் பணியில் அமர்ந்து ஐந்தாவது நாளில் 136 பேரின் வேலைத் தன்மை குறித்து என்ன அறிந்துகொண்டார். இத்தனை நாட்கள் போராட்டம் நடத்தியும், துணைவேந்த ரும் வேந்தரும் அரசும் மனமிரங்க வில்லை. முதலமைச்சர், துணை வேந்தர் ஆகியோர் எங்களின் வாழ்வா தாரத்தை கருத்தில் கொண்டு மீண்டும் பணியில் அமர்த்தும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். ஜூன் 14 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர்கள் முன்னிலை யில் ஒரு நாள் அடையாள உண்ணாவிர தம் நடைபெறுகிறது என்று உறுதி யாக தெரிவித்துள்ளனர். (ந.நி)