தஞ்சாவூர், ஜூன் 14- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டையை அடுத்த கரம்பயம் கடைவீதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் விளக்க - நிதியளிப்பு பொதுக்கூட்டம், பட்டுக் கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ். கந்தசாமி தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில், மாவட்டச் செயலா ளர் சின்னை. பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.சி.பழனி வேலு, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஆர்.மனோகரன், எம்.செல்வம், ஆர்.கலைச்செல்வி, என்.சுரேஷ் குமார், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.வாசு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்தில் கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆற்றிய உரை வருமாறு: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சில தினங்களுக்கு முன் தமிழகத்திலே வந்து பேசும்போது தமிழகத்திலிருந்து ஒருவரை பிரதமர் ஆக்குவோம் என்று பேசி யிருக்கிறார். அப்படி என்றால் மோடி யின் நிலை என்ன? தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களிலே போட்டியிடுவோம் என்றும் பேசியிருக்கிறார்.
தமிழகத்தில் இருக்கிற அண்ணா திமுக நண்பர்களே, அப்படி என்றால் நீங்கள் எத்தனை இடத்தில் போட்டியிடப் போகிறீர்கள்? உங்கள் கூட்டணி கட்சிக்கு எத்தனை இடத்தை தரப்போகிறீர்கள்? அதிமுக பார்த்து பாஜகவுக்கு சீட்டு தருவதா, பாஜக அதிமுகவுக்கு சீட் தருவதா என்ற கேள்வி எழுகிறது. உள்ளாட்சி மன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக 96 விழுக்காடு இடங்களிலே டெபாசிட்டை பறிகொடுத்தது என்பது தான் உண்மை. மோடியை நம்பி, அமித்ஷாவை நம்பி அவர்களின் தயவில், அரசியல் நடத்தக்கூடிய ஒரு பரிதாபகரமான நிலையில் தான் அதிமுக உள்ளது. வீதிவீதியாக நரேந்திர மோடி 8 நாட்கள் பிரச்சாரம் செய்தும், ஆட்சி யில் இருந்தும், கர்நாடகா தேர்தலில் பாஜக மண்ணைக் கவ்வியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சி யை பறிகொடுத்தது. தில்லி மாநக ராட்சித் தேர்தலில் 15 வருடம் பொறுப்பில் இருந்த பாஜக இன்று அதையும் பறிகொடுத்து பரிதாபகர மான நிலையில் உள்ளது. இப்போது காற்று மாறி வீசுகிறது. 2024 நாடாளு மன்ற பொதுத் தேர்தலில் பாஜக பெறப் போகிற மிகப்பெரும் தோல்விக்கான முன்னோட்டமாக இது உள்ளது. இத்தனை ஆண்டுகள் பதவியில் இருந்த நீங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள்? வேலைவாய்ப்பை ஏற்படுத்தினீர்களா? விவசாயி களுக்கு கடன் தள்ளுபடி செய்தீர் களா? ஆனால் கார்ப்பரேட் முதலாளி களுக்கு 11 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்கிறீர்களே, என்ன நியாயம்?
அதிமுகவினரே, நீங்கள் இந்த பாஜகவினருடன் எந்த முகத்தோடு சென்று ஓட்டு கேட்கப் போகிறீர்கள்? அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தை குறி வைத்து பாஜக செயல்படுகிறது. மோடி எத்தனை முறை காவடி எடுத்தாலும் தமிழ கத்தில் அவர்கள் எண்ணம் ஈடேறாது. ஒன்றிய அரசு ரயில்வே துறை உள்ளிட்ட அனைத்தையும் தனி யார்மயமாக்க முயல்கிறது. ஒடிசா வில் ரயில் விபத்து ஏற்பட்டு ஏராள மானோர் பலியானார்கள். மோடி ஆட்சியில் ரயில்வேத்துறை சீரழிக்கப்பட்டது தான் இதற்கு காரணம். ஏற்கனவே நடந்த ரயில் விபத்துகளின்போது, அமைச்சர் களாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி, நிதிஷ்குமார் ஆகியோர் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகி னார்கள். ஆனால் பாஜக ரயில்வே அமைச்சர் என்ன செய்தார்? தவறுக்கு பொறுப்பேற்றாரா? பதவியை ராஜினாமா செய்தாரா? நாடு முழுவதும் உள்ள எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றி ணைந்து பாட்னாவில் கூடிப் பேச வுள்ளனர், பாஜகவை வீழ்த்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பாஜக என்ற ஒற்றை எதிரியை அகற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து செயல்படுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.