சேலம், மார்ச் 16 - ஆணவப்படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் கந்துவட்டிக் கொடுமையைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றிட தமிழக அரச முன் வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் சேலத்தில் மார்ச் 14,15,16 தேதிகளில் நடைபெற்றது. கூட்டத்தினிடையே, செவ்வாயன்று மாலை செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழகம் முழுவதும், குறிப்பாக சேலம் உள்ளிட்ட பல மாவட்டங் களில் கந்துவட்டி மைக்ரோ பைனா ன்ஸ் மூலம் மிக அதிகப்படியான வட்டியைக் வாங்கி மக்களைத் துன்புறுத்தி வருகின்றனர். குறிப்பாக சேலம் ஜலகண்டாபுரம் பகுதியில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் இரண்டு லட்சம் ரூபாய்க்கு 15 லட்சம் ரூபாய் வரை வட்டி போட்டு மக்க ளை சொல்லொணா துயரத்திற்கு ஆளாக்கியுள்ளனர். இதனால், இந்த மாவட்டத்தில் கைத்தறி - விசைத்தறி தொழிலாளர்கள் மிகவும் பாதிப்பு அடைந்து உள்ளனர். கந்து வட்டிக்காரர்கள் , பெண்களை இழி வான சொற்களால் வசைபாடு வதும் துன்புறுத்துவதும் கண்டனத் திற்குரியது.
தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட வேண்டும். கேரளாவைப் போல் மக்களுக்கு பயன்பெறும் வகையில் வங்கிகளை உருவாக்கி செயல்பட - மக்களுக்கு கடன் வழங்க அரசு முன்வர வேண்டும். அப்போது, மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டிய அவசியம் ஏற்படாது. இதுகுறித்து ஒன்றிய அரசை மாநில அரசு நிர்ப்பந்தம் செய்ய வேண்டும். ரிசர்வ் வங்கியிட மும் இது சம்பந்தமாக வற்புறுத்தி இப்பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும். நாமக்கல் பள்ளிபாளையத்தில் எங்களது தோழர் வேலுச்சாமி படு கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்ட னை விதித்து தீர்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. இப்பிரச்சனையே, கந்து வட்டி கொடுமைக்கு எதிராக நடந்த ஒன்று. தமிழகத்தில் கந்துவட்டி கொடு மையால் பலர் தற்கொலை செய்துள் ளனர். அதனை தடுத்து நிறுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளாவில் தனியாரிடம் கடன் வாங்குவோருக்கு நிவாரண அளிக்கும் சட்டத்தை இடது ஜனநா யக முன்னணி அரசு கொண்டு வந்துள்ளது. அந்த சட்டத்தின் படி, தனியாரிடம் கடன் வாங்கியவர்கள் அரசிடம் முறையிடலாம். இரு வரையும் அழைத்துப் பேசி சுமூக மாக பேசித் தீர்க்க அது உதவும், அதுபோல் தமிழகத்தில் தனியார் கடன் நிவாரணச் சட்டம் கொண்டு வரவேண்டும்.
சமீபத்தில் கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. இன்றும் தமிழ கத்தில் ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடக்கின்றன. கடந்த மாதம் கடலூர் மாவட்ட நீதிமன்றம் கண்ணகி- முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கில் தீர்ப்பு வழங்கி யுள்ளது. இந்த வழக்குகள் பல்லா ண்டுகளாக நீடித்தன. எனவே ஆண வப் படுகொலை வழக்குகளை இழுத்தடிக்காமல் 6 மாதத்திற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். தமிழ கத்தில் ஆணவப்படுகொலை தடுப்பு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.
காலமுறை ஊதியம்
தமிழகத்தில் வேலை தேடும் அனைவருக்கும் அரசு மற்றும் தனி யார் நிறுவனங்கள் எதுவாக இருந்தா லும் பணி நிரந்தரம் இல்லாத சூழல் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத் தில் 700க்கும் மேற்பட்ட வேலை செய்பவர்களை அவுட்சோர்சிங் முறைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது தொகுப்பூதியம் மதிப்பூதி யம் மட்டும் வழங்கப்பட்டு வரும் சூழல் உள்ளது. அவர்களை எதிர்கா லத்தில் எந்த உத்தரவாதம் இல்லாத சூழல் ஏற்படும். எனவே அனைவரை யும் காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும்.
பழைய பென்சன் திட்டம்
தமிழக அரசு ஊழியர்கள் - ஆசிரி யர்களின நீண்ட நாள் கோரிக்கை யான பழைய பென்ஷன் திட்டத்தை அமலாக்க வேண்டும். தமிழக முதல் வர் தேர்தல் வாக்குறுதியில் அளித்த படி பழைய பென்ஷன் திட்டத்தை தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அமுலாக்க வேண்டும்.
தமிழக பட்ஜெட்டில்...
தமிழக பட்ஜெட்டில் நிறை வேற்றிய வேண்டியவை பற்றி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக முதல்வரிடம் தெரிவித்துள் ளோம். அதில் சிறு குறு தொழிலாளர் களை பாதுகாக்க வேண்டும், மூலப் பொருட்களை வாங்கி தொழில் செய்ய முடியாத சூழல் உருவாகி யுள்ளது. எனவே அரசாங்கமே வாங்கி அவர்களுக்கு வழங்கவேண்டும். குடும்பத் தலைவிகளுக்கு ஆயி ரம் ரூபாய் வழங்கப்படும் என அறி வித்துள்ளதை உடனடியாக நடை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை தமிழக முதல்வரி டம் கொடுத்துள்ளோம். தற்போதைய பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். அதேபோன்று நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்தினை 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்திட அரசு அறிவித்தது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ள சூழலில் அத்திட் டத்தை விரிவாக செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்கு கூடுதல் நிதி யை ஒதுக்கிட வேண்டும். இதே போன்று மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட தொழி லாளர்களுக்கு- குறிப்பாக தொழி லாளர்கள் பணி ஓய்வு பெற்று பல ஆண்டுகள் கடந்தும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணி பலன்கள் கிடைக்கவில்லை. அவர்களுக்கு குறிப்பாக டிஏ அரியர்ஸ் உடனடி யாக வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் 18ஆம் தேதி சென்னையில் முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளனர். அவர்களுக்கு உதவித் தொகையை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத் துள்ளனர் அதனை நிறைவேற்ற வேண்டும்.
திடீர் தீர்ப்புகள்
தமிழகம் முழுவதும் நீதிமன்றங் களில் மக்களின் நிலையை உணரா மல் பல தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்கி வருகின்றனர்.அந்தத் தீர்ப்பு கள் மோசமான விளைவுகளை உரு வாக்குகிறது. மதுரையில் இருக்கும் நீதிபதி மலைகளில் மாடுகளை மேய்க்கக் கூடாது என தீர்ப்பளித்துள் ளார். நீர்நிலை புறம்போக்கில் வீடு கட்டி குடி இருப்பவர்களை காலி செய்து கட்டடங்களை இடிக்க வேண்டும் என ஒரு தீர்ப்பில் கூறி யுள்ளனர். இப்பிரச்சனைகளில் அரசு ஒவ்வொரு வழக்கிலும் தனித்தனி யாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் நிலைகளில் இருக்கும் குடும்பத்தினரை அப்புறப் படுத்த அவர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தித் தந்து அதன் பின்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
கோவில் நிலங்கள்
கோவில் நிலங்களில் வாடகை வாங்க புதிய கமிட்டியை அரசு நிய மித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 5 ஆண்டுகள் 10 ஆண்டுகள் என வாடகை வசூலிக்கும் முயற்சியில் அந்த கமிட்டி ஈடுபட்டுள்ளது இப்பிரச்சனையில் அரசு உரிய தலையீடு செய்ய வேண் டும். கோவில்களில் எண்ணற்ற சொத்து க்கள் உள்ளது, பல ஆண்டுகளாக பயன்படுத்தும் பயனாளர்களுக்கு மொத்த தொகை வாங்கிக்கொண்டு பட்டா வழங்க நடவடிக்கை வேண்டும், அறநிலையத்துறை அமைப்புகள் ஒன்றிணைந்து சமீபத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர், அது சம்பந்தமாக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நான்கு மாநிலத் தேர்தல் முடிந்த வுடன் தொழிலாளர்களின் பிஎப் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது மோடி அரசு. இது கண்டனத்திற்குரியது. இதே போல போரைக் காரணம் காட்டி இந்தி யாவில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவார்கள். இது போன்ற மக்கள் பிரச்சினைகள் வரும்போது இடதுசாரி மற்றும் ஜனநாயக கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடு வோம். இவ்வாறு அவர் கூறினார். செய்தியாளர் சந்திப்பில் கட்சியில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப் பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் என். குணசேகரன், ஏ.லாசர், சேலம் மாவட்ட செயலாளர் மேவை. சண்முகராஜா ஆகியோர் பங்கேற்றனர். (ந.நி)