tamilnadu

லக்கிம்பூர் கேரி படுகொலையில் நீதியை நிலைநாட்ட ஒன்றிய அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

புதுதில்லி, ஜன. 9- லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலை யில் நீதியை உறுதி செய்ய மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று உண்மை கண்டறியும் குழு வலியுறுத்தியுள்ளது. ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில்கூட விவாதிக்காமல் கார்ப்பரேட் நலன்களை முன்வைத்து 3 வேளாண் சட்டங்களை கொண்டுவந்தது. இச்சட்டங்கள் வேளா ண்துறையை சீரழிக்கும் என்பதால்  ஓராண்டுக்கும் மேலாக தில்லியின் நுழை  வாயில்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாடு முழுவதும் இப்போராட்ட த்திற்கு ஆதரவாக  விவசாயிகள் களமிறங்கி னர். உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கேரியில் பேரணி சென்ற விவசாயிகள் மீது ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சென்ற வாகன அணிவகுப்பு மோதியது. இதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். நாடு  ழுழுவதும் எழுந்த பலத்த எதிர்ப்புக்கு பிறகு ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.  இச்சம்பவம் குறித்த சிறப்பு விசார ணைக்குழு 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை திங்களன்று (ஜன.3) நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதில் அமைச்சரின் மகன், மைத்துனர் உட்பட 14 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரித்த பேரா சிரியர் ஜக்மோகன் சிங் தலைமையிலான உண்மை கண்டறியும் குழுவும் தனது  அறிக்கையை செவ்வாயன்று வெளி யிட்டுள்ளது. அதில், அஜய் மிஸ்ராவின் கடந்தகால நடவடிக்கைகள் மற்றும் உள்துறை இணை அமைச்சராக அவருக்கு இருக்கும் நிபந்தனையற்ற அதி காரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நாசவேலைக்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது. நீதி கிடைக்க வேண்டு மானால் அஜய் மிஸ்ராவை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது. “மக்கள் நிற்க இட மில்லாத சிறிய நடைபாதையில் அமைச்சரின் மகனது வாகனம் புகுந்து மோதியது எனவும், விவசாயிகள் தப்பிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அந்த இடத்தில் வாகனத்தை மோதச் செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் அந்த அறிக்கையில், தாக்குதல் நடத்தியவர்களுக்கு காவல்துறையினர் உதவினர். மாநில அரசும், காவல்துறையும் திட்டமிட்டு பொய்களை பரப்புகின்றன. நேரில் பார்த்த சாட்சியின்படி, மோதலில் காயமடைந்த பாஜக ஊழியர் ஷியாம்சுந்தர் நிஷாத், காவல்துறையின் காவலில் உயிருடன் இருந்தார். எனினும், பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் விளக்கம் அளிக்க வேண்டிய கடமை காவல்துறையினருக்கு உள்ளது,’’ எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.