tamilnadu

ஜெ. ஓய்வெடுக்க மறுத்தார்: மருத்துவர் வாக்குமூலம்

சென்னை, மார்ச் 7- ஜெயலலிதா மரணம் தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆறு முகசாமி ஆணையத்தின் விசாரணை மார்ச் 7அன்று தொடங்கியது. அப்போலோ மருத்துவர்கள் குறுக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது, மருத் துவர்கள் ஜெயலலிதாவுக்கு வழங்கிய அறிவுரைகள் குறித்து அப்போலோ மருத்துவர் பாபு மனோகர் ஆறுமுக சாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தார். ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுக சாமி ஆணையம் இரண்டு ஆண்டுக ளுக்கு பிறகு மார்ச் 7 முதல் மீண்டும்  செயல்பட தொடங்கிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறு முகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள் அரசு உயர் அதிகாரிகள் என இதுவரை 150க்கும் மேற்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். மருத்துவர்களை விசாரிக்கும்போது மருத்துவ குழு வல்லுனர்கள் முன்னிலை யில் விசாரிக்க வேண்டும் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்  சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடை பெற முடியாத சூழல் நிலவியது.

இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் முதல் நாள் விசார ணையில் அப்போலோ மருத்துவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அதில், 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக  முதலமைச்சராக பதவியேற்கும் நாளுக்கு முன்னதாக ஜெயலலிதா வுக்கு தலை சுற்றல், மயக்கம், துணை யில்லாமல் நடக்க முடியாத சூழல் ஆகிய பிரச்னை இருந்தது என அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர் வாக்குமூலத்தில் தெரிவித்தார். மேலும், மருத்துவர் சிவக்குமார் அழைத்ததின் பேரில் பதவியேற்புக்கு முந்தைய நாள் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவை சென்று சந்தித்தேன் என்ற கூறிய, பாபு  மனோகர் அவருக்கு சில மருந்துகளை  பரிந்துரைத்ததோடு, சில உடற்பயிற்சி களை மேற்கொள்ளவும் பரிந்து ரைத்தேன். மேலும் சிறுதாகூர் அல்லது  ஊட்டி சென்று சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறு பரிந்துரைத்தேன் என்றார்.  ஆனால், நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறிய ஜெயல லிதா ஓய்வெடுக்க மறுத்தார் என்றும்  பாபு மனோகர் வாக்குமூலம் அளித்தார்.