மதுரை, டிச.9- நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை சார்பில் மதுரை மாநகராட்சி அலு வலக வளாகத்தில் டிசம்பர் 9 வெள்ளியன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தூய்மைப் பணியாளர்களின் சமூக, பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்வினை மேம்படுத்தும் பொருட்டு 2022-23 ஆம் ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை யில், தூய்மைப் பணியாளர்கள் வாழ்வினை மேம்படுத்தவும், பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தூய்மைப் பணி யாளர்கள் மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தப்படும். அவர்களுக்கான பல்வேறு அரசு நலத்திட்டங்களை ஒருங்கி ணைத்து, பயன்பெறச் செய்யவும், அவர்களின் குழந்தைகள் முறையான கல்வி பெறுவதை உறுதி செய்யவும், இயந்திரமயமாக்கப்படும் தூய்மைப்பணி யில் அவர்களுக்கு தேவையான திறன் பயிற்சியினை வழங்கி அவர்களை அப்பணியில் ஈடுபடுத்தவும் விருப்பத்தின் அடிப்படையில் அவர்களுக்கு மாற்றுத் தொழில் தொடங்கவும் வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்து, இத்திட்டத்திற்கான இலச்சினையை வெளியிட்டார். தூய்மைப் பணியாளர்களை கண்டறிந்து கணக்கெ டுக்கும் பணியினை மேற்கொள்வதற்கான தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்ட மொபைல் செயலியையும் முத லமைச்சர் வெளியிட்டார். தொடர்ந்து, முதலமைச்சர் ஐந்து தூய்மைப் பணியாளர்களுக்கு தலைக்கவ சம், கையுறை, கால் உறை, ஒளிரும் மேல் சட்டை ஆகிய பாதுகாப்பு உபகரணங் களை வழங்கி, தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்ட கள ஆய்வு பணிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்ட குறும்படங்களை பார்வை யிட்டார்.
அனைத்து முறைசாரா பணியாளர்களும் பயனடைவர்
இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் 18 ஆயிரத்து 859 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 34 ஆயிரத்து 442 தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 53 ஆயிரத்து 301 பணியாளர்கள் மட்டு மல்லாமல் தனியார் துறைகள், நிறுவனங்கள் மற்றும் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து முறைசாரா பணியாளர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். இத்திட்டத்தினை அகமதாபாத்தில் உள்ள நகர்ப்புற மேலாண்மை மையத்தின் (Urban Management Centre) உதவியுடன் சிறப்பாக செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. நகர்ப்புற மேலாண்மை மையத்தின் உதவி யுடன் தமிழ்நாட்டில் கழிவு மற்றும் கசடு தொடர் புடைய பணிகளில் ஈடுபட்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த முன்னோடி திட்டமாக (Pilot basis) சென்னை மாநகராட்சியில் மண்டலம்-6 திரு.வி.க. நகரிலும், மதுரை மாநகராட்சி, புதுக் கோட்டை மற்றும் பொள்ளாச்சி நகராட்சிகள், சேரன் மகாதேவி பேரூராட்சி ஆகிய 5 நகர்ப் புற உள்ளாட்சி அமைப்புகளை தேர்ந்தெடுத்து தூய்மைப் பணியாளர்களை கண்டறிந்து அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை முதலமைச்சர் முதற்கட்ட மாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தொடங்கி வைத்தார். இத்திட்டம் பின்னர், படிப்படியாக தமிழ்நாட்டில் உள்ள மற்ற அனைத்து உள்ளாட்சி அமைப்பு களிலும் செயல்படுத்தப்படவுள்ளது இத்திட்டத்தின் மூலம் மாநிலமெங்கும் உள்ள தூய்மைப் பணியாளர்கள் கண்டறி யப்பட்டு, அவர்களுக்கு உரிய திறன் பயிற்சிகள், அவர்களது குழந்தைகளுக்கு முறையான கல்வி வசதி வழங்குதல் மற்றும் மாற்றுத்தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடன் உதவி, ஓய்வூதி யம், காப்பீடு போன்ற அரசு திட்டங்களை இனணப் பதற்கான வழிமுறைகளும் மேற்கொள்ளப் படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, கூட்டுறவுத் துறை அமைச்சர் இ. பெரியசாமி, வருவாய் -பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மீன்வளம் - மீனவர் நலத்துறை- கால்நடை பரா மரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதா கிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், வணிக வரி- பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி-மனிதவள மேலாண்மைத் துறை அமைச் சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பூமிநாதன், கோ.தளபதி, ஆ. தமிழரசி, மதுரை மாநகராட்சி மேயர் வி. இந்தி ராணி பொன்வசந்த், நகராட்சி நிர்வாகம்-குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செய லாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.