கோவை, டிச.20– மூலப்பொருட்களின் தொடர் விலையேற்றத் திற்கு காரணமான ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தொழில் முனைவோர் கூட்டமைப்பின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் கோவை யில் மாபெரும் வெற்றி பெற்றது. 50 ஆயிரம் தொழில் கூடங்களை மூடி ஒன்றிய அரசிற்கு தங்களது எதிர்ப்பை தொழில் நகரம் வெளிப்படுத்தியது. கொரோனா காலத்தை தொடர்ந்து மூலப் பொருட்களின் விலைகள் இந்தியாவில் கடுமை யாக உயர்ந்துள்ளது. நூறு சதவிகித விலை யேற்றத்தின் காரணமாக ஜாப் ஆர்டர் பணிகளை செய்யும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன.
இந்த மூலப்பொருட்களின் விலை உயர்வால் பெரிய தொழிற்சாலைகளும் நெருக்கடியை எதிர்கொண்டு வரு கின்றன. மேலும், இத்தொழில்களை நம்பியுள்ள மறைமுக தொழில்களும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி யுள்ளன. இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரு கின்றனர். இதுகுறித்து தொடர்ந்து ஒன்றிய அரசிடம் தொழில் முனைவோர்கள் கோரிக்கை வைத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்காரணமாக மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி திங்களன்று நாடு தழுவிய ஒருநாள் கதவடைப்பு போராட்டத்திற்கு 170 தொழில் கூட்ட மைப்பை சேர்ந்த அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. இதன் ஒரு பகுதியாக கோவையில் சுமார் 60 ஆயிரம் தொழிற் கூடங்கள் முழுமையாக அடைக்கப்பட்டன. இதனால் கோவையில் மட்டும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பங்கேற்ற இப்போராட்டத்தால், சுமார் 1500 கோடி ரூபாய் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
முன்னதாக கதவடைப்புப் போராட்டத்தின் ஒருபகு தியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆயிரக் கணக்கான தொழில் முனைவோர்கள் கைகளில் பதாகை களை ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து கொடிசியா அமைப்பின் தலைவர் ரமேஷ்பாபு பேசுகையில், மூலப்பொ ருட்களின் விலைகள் சுமார் 100 சதவிகிதம் முதல் 200 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளன. இதனால் தொழில் துறை யினர் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றோம். எனவே, உடனடியாக இந்த விலைகளை குறைக்கவும், மூலப்பொருட்கள் ஏற்றுமதியை ரத்து செய்துவிட்டு, இறக்கு மதிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (20.12.21) ஒருநாள் அடையாளப் போராட்டத்தை நடத்துகிறோம்.
ஒன்றிய அரசு தங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டம் தீவிரப்படுத்தப்படும். இந்த போராட்டம் காரணமாக நாடு முழுவதும் ஒரே நாளில் 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
சென்னை
மூலப் பொருட்களின் விலையை உயர்த்திய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொ ழில்கள் சங்கம், தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந் தொழில் முனைவோர் சங்கங்களின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திங்களன்று (டிச.20) ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.நித்தி யானந்தம் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தலைவர் ஏ.எஸ்.கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.