tamilnadu

img

செப். 5 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்

போடியில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

தேனி, செப்.2 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போடி அலுவலகத்தில் கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  விநாயகர் சதுர்த்தி திருவிழா தமிழகத்தில் வன்முறை இல்லாமல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற் காக காவல்துறையை பாராட்டு கிறோம். விநாயகரை வைத்து அரசியல் பேசும்போதுதான் பிரச்சனை ஏற்படு கிறது. தமிழகத்தில் இந்த விசயத்தில் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். மேலும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக பல்வேறு இடங்களில் மாற்று மதத்தவர்கள் விழாவில் பங்கேற்றனர்.

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சலுகை 

 தமிழக முதல்வர் அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை துவங்குவதாகவும், விரை வில் குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும், அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல்வ ரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளா ர்கள். அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்குவது போல் எல்லா திட்டங்களை யும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிளுக்கும் வழங்க வேண்டும்

சுங்கச்சாவடி கட்டண  உயர்வை திரும்பப்பெறுக! 

அதேபோல் ஒன்றிய அரசு சுங்கச்சாவடி கட்டணத்தை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.  பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள லாரி உள்ளிட்ட வாடகை வாகன உரிமையாளர்கள் சுங்கக் கட்டண உயர்வால் மேலும் பாதிக்கப்படுவதோடு, விலைவாசி  உயரும் நிலையும் ஏற்பட்டுள்ளது. சுங்கக் கட்டண உயர்வு தனியார் லாபத்திற்காகவே உயர்த்தப்பட்டுள் ளது. எனவே சுங்கக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் வலுவான போராட்ட த்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும்.

கார்ப்பரேட் நலனுக்காக ஒன்றிய அரசு 

ஒன்றிய அரசு தினந்தோறும் கட்டண உயர்வு, வரி உயர்வு அறிவித்து  ஏழை எளிய மக்களின் முதுகெலும்பை உடைத்து வருகிறது. இதனைக் கண்டித்து 5 ஆயிரம் குழுக்கள் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து வருகிறோம். இதனை வலியுறுத்தி சென்னையில் 5 ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஒன்றிய  அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி களை ஒருங்கிணைத்து வலுவான போராட்டத்தை நடத்துவோம். போடியில் ஏலக்காய் விளைச்சல் குறைந்த நிலையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கடுமையான நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. நூல் விலை உயர்வால் விசைத்தறி, ஜவுளித் தொழில் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்தித்து வருகிறார்கள்.கோதுமை கொள்முதலை அரசு கைவிட்டதன் விளைவாக  தனியார் கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்யப்பட்டதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரசு கொள்முதல் கொள்கையை கைவிட்டு ஏழை, எளிய   மக்களின் நலனுக்கு எதிராக, கார்ப்பரேட் முதலாளிகளை வலுப்படுத்துவதே ஒன்றிய பாஜக அரசின் குறிக்கோளாக உள்ளது.

விவசாயிகளுக்கு கடன், உரம்

தற்போது தமிழகத்தில் நல்ல மழை பெய்து விவசாயப் பணிகள் தொடங்கி யுள்ளன. இப்பணிகளை மேற்கொள்ள விவசாயிகளுக்கு  கூட்டுறவு கடன், தேவையான உரம் கிடைப்பதில் சிரமம்  ஏற்பட்டுள்ளது.  பால் உற்பத்தியாளர் கள் கொள்முதல் விலை உயர்வு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும்.

மலை மாடுகளுக்கு அனுமதி 

தேனி மாவட்டத்தில் மலை மாடு களை வனத்துக்குள் மேய்ப்பது தொடர்பாக நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கிய நிலையில் சீராய்வு மனுதாக்கல் செய்ய முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம். வனத்தில் மாடுகள் புற்களை மட்டுமே மேயும். இதனால் வனம் அழியாது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக பற்றிய தீர்ப்பு 

அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பியபோது, “இரு  பிரிவினர்களுக்கும் கொள்கை ரீதியான பிரச்சனை இல்லை. இருவருமே பாஜகவை ஆதரித்து வருகிறார்கள். அதிகாரம், பணம், பதவி இவற்றை பங்கிடுவதில் ஏற்பட்ட போட்டிதான்” என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார். போட்டியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் ஏ.வி.அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகன், மூத்த தலைவர் கே.ராஜப்பன், தாலுகா செயலாளர் எஸ்.செல்வம். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.கே.பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.