tamilnadu

img

மதுரை சிறையில் ரூ.100 கோடி முறைகேடு

சென்னை, மார்ச் 8 - மதுரை மத்திய சிறையில் நடை பெற்ற 100 கோடி ரூபாய் ஊழல் முறை கேடு குறித்து மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சிறை கைதிகள் உரிமை மைய இயக்குநர் பி.புகழேந்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மத்திய சிறை கைதி கள் தயாரித்த மருத்துவ, எழுது பொருட்களை, அரசு அலுவல கங்கள், மருத்துவமனைகள், நீதி மன்றங்களுக்கு அனுப்பியதாக போலி  கணக்கு தயாரித்து ஊழல் செய்துள்ள னர். 2016 - 2021 மார்ச் மாதம் வரை நடந்த சுமார் 100 கோடி ரூபாய் வரை ஊழல் முறைகேடு நடந்துள்ளது என்று  தெரிவித்திருந்தார். குறைந்த அளவு பொருட்களை உற்பத்தி செய்துவிட்டு, அதிக உற்பத்தி  செய்தது போல் கணக்கு காண்பித்துள்ளனர். இந்த முறை கேட்டில் அப்போதைய சிறை கண்காணிப்பாளர், டிஐஜி-களுக்கு தொடர்பு உள்ளது. இது தொடர்பாக உள்துறை செயலாளர், சிறைத்துறை டிஜிபிக்கு புகார் அனுப்பியும் நட வடிக்கை எடுக்கவில்லை. எனவே, லஞ்ச  ஒழிப்புத்துறை விசாரணைக்கு  உத்தரவிட வேண்டும் எனவும் குறிப் பிட்டிருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி  முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது. ஊழல் புகார் தொடர்பாக விசாரணை நடத்தும்படி குற்ற  விசாரணை முறைச் சட்டப்படி, சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ய அறிவு றுத்தி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். அதேசமயம், இந்த புகார்  தொடர்பாக வழக்கு பதிந்து விசார ணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு தடை இல்லை எனவும் நீதிபதிகள் தெரி வித்தனர்.