ஹிஜாப் உடையை வைத்து மாணவர்களிடையே மத மோதலை உருவாக்கும் கார்நாடக பாஜக அரசை கண்டித்து புதனன்று (பிப்.10) சைதாப்பேட்டையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் ஆனந்த்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் ஆர்.ஜான்சி, செயலாளர் ஆர்.பாரதி உள்ளிட்டோர் பேசினர்.