tamilnadu

நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களில் 12,838 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு

சென்னை, மார்ச் 2- தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் அனை வரும் தனித்தனியாக உறுதி மொழியை வாசித்து பொறுப்பேற்றுக்கொண்டனர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 அன்று நடைபெற்றது. 12,819 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு அமைதியான முறையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தி  முடித்தது. மொத்தம் உள்ள 21 மாநகராட்சி களின் 1,373 வார்டுகளில் 4 வார்டு கவுன் சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டனர். 

மொத்தமுள்ள 3,843 நகராட்சி வார்டுகளில் 18 வார்டு உறுப்பினர்கள்  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 7,621 பேரூராட்சி வார்டுகளில் 196  கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு  செய்யப்பட்டனர். 7 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப் பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை கடந்த 22 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. திமுக தலைமையிலான மதச்சார் பற்ற கூட்டணி அமோக வெற்றிபெற் றது. தேர்தல் மூலம் வெற்றி பெற்ற கவுன்சிலர்களும், போட்டியின்றி வெற்றி பெற்றவர்களும் மார்ச் 2 அன்று பதவி ஏற்றனர். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 12,838 வார்டு கவுன்சிலர்கள் பொறுப் பேற்றுக் கொண்டனர்.

களை கட்டிய அலுவலகங்கள்

பதவி ஏற்பு விழாவுக்காக அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலு வலகங்கள் வண்ண  மலர்களால் அலங் கரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி யளித்தன. பல வாழை மரங்களுடன் தோரணங்களும் அலங்கரித்தன. மதுரை உட்பட பல மாநகராட்சி வளாகங் களில் கவுன்சிலர்கள் பதவியேற்பதை டிஜிட்டல் திரையில் பார்க்கும் வகை யில் அவர்களது ஆதரவாளர்கள், குடும் பத்தினருக்காக பிரமாண்ட பந்தல் போடப்பட்டிருந்தது. புதனன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா ஒவ்வொரு அலுவலகத்தி லும் உற்சாகமாக நடைபெற்றது. மாநக ராட்சி மற்றும் நகராட்சிகளில் அந்தந்த ஆணையர்கள் புதிய கவுன்சிலர் களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர். பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைக்க கவுன்சிலர்கள் பொறுப் பேற்றுக்கொண்டனர். புதிதாக தேர்வு  செய்யப்பட்ட கவுன்சிலர்கள் ஒவ்வொரு வரும் தனித்தனியாக உறுதி மொழியை வாசித்து பொறுப்பேற்றுக்கொண்டனர். அப்போது, தங்களது வழிக்காட்டிகள், கட்சித் தலைவர்களின் பெயர்களை நினைவு கூர்ந்து சில தனித்துவமான வார்த்தைகளையும் பயன்படுத்தினர். 

அலைமோதிய தொண்டர் கூட்டம்

திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளாட்சி அலுவலகங்களில் குவிந்தனர். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 50 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கப் பட்டதால் அனைத்து பொறுப்புகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் சரிசமமாக பதவி வகிக்கிறார்கள். அவர்களது பதவியேற்பை காண தாய், தந்தை, கணவர், உறவினர்களும் குடும்பம், குடும்பமாக வந்திருந்தனர்.

பாரம்பரியம் மிக்க சென்னை பெரு மாநகராட்சி, மதுரை, கோவை, திருச்சி, திருப்பூர், திண்டுக்கல், தூத்துக் குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர், சேலம் மற்றும் புதிதாக தரம் உயர்த்தப் பட்ட கடலூர், மயிலாடுதுறை, கும்பகோணம், ஓசூர், ஆவடி, தாம் பரம், காஞ்சிபுரம், சிவகாசி உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் பதவி ஏற்பு விழா விமரிசையாக நடந்தது. அதிலும் குறிப்பாக புதிய மாநகராட்சிகளில் பதவி ஏற்பு விழா உற்சாகமாக நடைபெற்றது. எங்கு பார்த்தாலும் திமுக தொண்டர்களும், தோழமைக் கட்சிகளான சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள் கொடிகளுடன் காணப்பட்டனர்.

அதேபோல் தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் பதவி ஏற்பு விழா விமரிசையாக நடந்தது. பல்வேறு இடங்களில் வெற்றி பெற்ற சுயேட்சை கவுன்சிலர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.1,289 பதவிகளுக்கு நாளை மறைமுக தேர்தல்

வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்றதைத் தொடர்ந்து பிப்ரவரி 4 அன்று மாநகராட்சிகளில் மேயர் மற்றும் துணை மேயருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. 21 மேயர்கள், துணை மேயர்கள், 138 நகராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள், 490 பேரூராட்சிமன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் என மொத்தம் 1,298 பதவிகளுக்கு இத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மேயர் மற்றும் நகராட்சித் தலைவர் தேர்தலும், பிற்பகல் 2.30 மணிக்கு துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் துணைத் தலைவர் தேர்தலும் நடைபெறுகின்றன. போட்டி இருக்கும் பட்சத்தில் தேர்தல் நடைபெறும். இதற்கான வேட்பு மனுக்கள் வழங்கப்படுகின்றன. திமுக கூட்டணியே பெரும்பான்மையாக வெற்றி பெற்று இருப்பதால் தேர்தலுக்கான வாய்ப்பு இருக்காது. வெற்றி பெற்றுள்ள கவுன்சிலர்களில் யாரேனும் ஒருவரை மேயராகவோ, துணை மேயராகவோ பெரும்பான்மை உள்ள கட்சி பரிந்துரை செய்யும். அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதன்பிறகு, மண்டல குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் தேர்வும் நடக்கிறது.