tamilnadu

img

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு

சென்னை,ஜன.3- சென்னையில் கடந்த சில நாட்க ளாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. இதனால் சவரன் ரூ.41 ஆயிரத்தை கடந்து  வாடிக்கையாளர்களை அதிர்ச்சி யடைய செய்துள்ளது. திங்களன்று (ஜன.3) ஒரு கிராம் தங்கம் ரூ. 5,191 ஆக உயர்ந்து ஒரு சவரன் ரூ.41,528 க்கு விற்பனையானது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ.41-ம், பவுனுக்கு ரூ.328-ம் உயர்ந்தது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழ்நிலையில் தங்கத்தின் விலை  உச்சத்தை தொட்டுள்ளதால் நகை  வாங்க இருந்தவர்கள் அதிர்ச்சி யடைந்து உள்ளனர். இதே போல  வெள்ளி விலையும் அதிகரித்திருக்கி றது. கிராம் ரூ. 74.50-லிருந்து ரூ.75.50 ஆகவும் கிலோ 74,500-லிருந்து ரூ.75,500 ஆகவும் உயர்ந்துள்ளது.