திருவாரூர்,டிச.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட 23 ஆவது மாநாடு டிசம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் திருவாரூரில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி வேலை அறிக்கையையும் மாவட்ட செயற்குழு உறுப் பினர் எம்.சேகர் வரவு- செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநிலக்குழு உறுப்பினரும், நாகை மாவட்டச் செயலாளருமான வீ.மாரிமுத்து வாழ்த்திப் பேசி னார். மாநாட்டை நிறைவு செய்து அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் உரையாற்றி னார். வரவேற்புக்குழு செய லாளர் என்.இடும்பையன் நன்றி கூறினார். மாநாட்டில் கட்சியின் மாவட்டச் செயலாளராக ஜி. சுந்தரமூர்த்தி தேர்வு செய்யப் பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக ஐ. வி. நாகராஜன், வி.எஸ். கலிய பெருமாள், ஆர். குமார ராஜா, பி.கந்தசாமி, எம்.சேகர், எம்.கலைமணி,சி. ஜோதிபாசு,கே. தமிழ் மணி, கே.என். முருகானந்தம், கே.ஜி. ரகுராமன், டி. முரு கையன், பி.கோமதி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்ட னர். 41 பேர் கொண்ட மாவ ட்டக்குழுவும் தேர்வு செய்யப் பட்டது.
பாராட்டு
விவசாயிகள் போராட்டத் தில் கலந்து கொண்டு ஒரு மாதம் சிறையில் இருந்த விவ சாயிகள் சங்க மாவட்டத்தலை வர் எஸ்.தம்புசாமி மாநாட் டில் பாராட்டப்பட்டார். மார்க்சிஸ்ட், செம்மலர் மாத இதழுக்கான சந்தா தொகை 20,800 ரூபாயை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி வழங்கினார்.