கேங்மேன் பணியாளர் கோரிக்கைகளை நிறைவேற்றுக! மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தொடர் போராட்டம்
திருச்சிராப்பள்ளி, அக். 8- கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக பதவி மாற்றம் செய்ய வேண்டும். 1.12.2019 முதல் வழங்க வேண்டிய 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சொந்த மாவட்டங்களுக்கு ஊர் மாற்றம் வழங்க வேண்டும். இட மாறு தல் பெற்ற பணியாளர்களை பணி விடுப்பு செய்ய வேண்டும். உள்முகத் தேர்வு மூலம் நிபந்தனையின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் புதனன்று 2 ஆவது நாளாக காத்திருப்பு போராட் டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியா ளர் அலுவலகம் முன்பு, திருச்சி மண்டல அளவிலான காத்திருப்பு போராட்டத் திற்கு மாநில துணைத் தலைவர் ரெங்க ராஜன் தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி திருச்சி மண்டல செயலாளர் அகஸ்டின், வட்டச் செயலா ளர்கள் புதுக்கோட்டை நடராஜன், திண்டுக்கல் திருமலைசாமி, திருச்சி மாநகர் பழனியாண்ட்டி, பெரம்பலூர் இளங்கோவன், வட்டத் தலைவர்கள் திருச்சி நடராஜன் புதுக்கோட்டை சித்தையன், பொருளாளர்கள் புதுக் கோட்டை விஜயகுமார், பெரம்பலூர் பாலகிருஷ்ணன், பெரம்பலூர் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு மாநில துணை பொதுச் செயலாளர் இருதயராஜ், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில துணைத் தலைவர் பஷீர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கரூர் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கரூர் கோட்டம் சார்பில், கரூர் தலைமை பொறியாளர் அலுவல கம் முன்பு 2ஆவது நாளாக நடை பெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட துணைத் தலைவர் ஜி.ஜீவானந்தம், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் க.தனபால் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சுப்பிரமணியன், டிஎன்பிஎல் தொழி லாளர் சங்க தலைவர் அரவிந்த், கட்டு மான சங்க கரூர் மாவட்டத் தலைவர் சரவணன், டிஎன்பிஇஓ சங்க செயலா ளர் எம்.சிராஜிதீன், மாநில துணைத் தலைவர் ஜி.கோபாலகிருஷ்ணன், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலா ளர் வி.பி.கந்தசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்டச் செயலா ளர் பொன். ஜெயராம், மாவட்டத் தலை வர் அன்பழகன், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கரூர் மாவட்ட நிர்வாகி சிவராமகிருஷ்ணன், டாஸ்மாக் சங்க கரூர் மாவட்டச் செய லாளர் கிருஷ்ணமூர்த்தி, கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் சரவணன் உள்ளிட்டோர் பேசினர். கரூர் மாவட்ட பொருளாளர் பி.ஈஸ்வரன் நன்றி கூறினார். பெரம்பலூர் கேங்மேன்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பெரம்பலூர் தமிழ்நாடு மின்வாரியர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகில் புதன் கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தார்.
