கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவருமான தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவையொட்டி, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில், நாகப்பட்டினம் மாவட்டக் குழு அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, மாநிலக் குழு உறுப்பினர் அ.ராதிகா, மாவட்டக்குழு, ஒன்றியக் குழு மற்றும் நகரக்குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.