சென்னை,டிச.28- தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படுகிறது. இது வரையில் முதல் தவணை தடுப்பூசி 5 கோடி பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 2-வது தவணை தடுப்பூசி 3, 87,58,232 பேர் போட்டுக் கொண்டனர். இன்னும் 1.70 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில் சுகாதாரத்துறை இந்த பணியை தீவிரப்படுத்தி வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட பெரும்பாலானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பது தெரிய வருகிறது. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 87 விழுக்காடும், 2-வது தவணை தடுப்பூசி 59 விழுக்காடும் போடப்பட்டுள்ளது. சென்னையில் முதல் தவணை தடுப்பூசி 50 லட்சத்து 3 ஆயிரத்து 811 பேருக்கு போடப் பட்டுள்ளது. இது 90 விழுக்காடு ஆகும். 2-வது தவணை 37, 75,880 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இது 68 விழுக்காடு ஆகும். தடுப்பூசி போட தகுதி உள்ளவர்க ளாக 55 லட்சத்து 31 ஆயிரம் பேர் உறுதி செய்யப்பட்டுள்ளனர். தனியார் மருத்து வமனைகள் மூலம் முதல் தவணை 6, 86,653 பேருக்கும், 2-வது தவணை 4,95, 236 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.