கிருஷ்ணகிரி கே. ஆர். பி. அணை யிலிருந்து முதல் போக சாகுபடிக்காக, விவசாய நீர் பாசனத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினர் செல்ல குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.