சென்னை, ஜன. 30- விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் அருகே அம்மன் கோவில்பட்டி புதூர் பகுதி யில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமாக பொம்மி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கே சனிக்கிழமை மாலை பட்டாசு தயாரிக்கும் பணிகள் முடிந்த பிறகு மீதமுள்ள கழிவுகளை எரிக்கும் பணியில் ஆறுமுகம், தெய்வேந்திரன், குபேந்திரன் ஆகிய 3 பேர் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர் பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட் ்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், நாட்டார் ்மங்களம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் ஆறுமுகம், குபேந்திரன் உயிரிழந்த செய்தி யைக் கேட்டு வருத்தமடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். வெடி விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு முதல மைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் தெய்வேந்தி ரனுக்கு 1 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்குமாறு ஆணை யிட்டுள்ளார்.