tamilnadu

img

பொருளாதாரத்தில் புறக்கணிக்கப்படும் பெண் உழைப்பு - ஜி.ராணி

பாலின சமத்துவம் என்பது அடிப்படை உரிமை மட்டும் அல்ல; அது சமூக நீதி. இன்று சர்வதேச மகளிர் தினம். இது தற்போது ‘கொண்டாட்டமாக’ கட்டமைக்கப் படுகிறது. ஆனால் இந்த நாள், பெண் விடுதலை எனும் புரட்சிக்கான விதை விதைக் கப்பட்ட நாள். டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் 1910-ஆம் ஆண்டு உலக சோஷ லிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பேசிய ஜெர்மானிய கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரும், மகத்தான மார்க்சிஸ்ட் போராளியுமான கிளாரா ஜெட்கின், அனைத்து நாட்டில் உள்ள பெண்களும் இணைந்து தனிச் சிறப்பு மிக்க தினமாக மகளிர் தினத்தை கடைபிடிக்க வேண்டும் என்றார். பெண்கள் சந்திக்கும் அனைத்து சவால்களையும் இணைத்து வாக்குரிமை கோரிக்கையும் சேர்த்து விவாதிக்க வேண்டும்; சம உரிமை கேட்டுப் போராட வேண்டும் என்ற தீர்மானத்தை வலியுறுத்தினார். 1911 ஆம் ஆண்டில் இருந்து பெண்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு பாலின சமத்து வம் குறித்து பேசி வந்தாலும், இன்றும் ஒவ் வொரு பிரச்சனையிலும் சம உரிமைக் காக போராடிக் கொண்டிருக்கிறாள் பெண்.  இந்தியாவில் பாலின சமத்துவமின்மை என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் அரசியல் ஏற்றத்தாழ்வுகளை குறிக்கிறது.

‘இந்தியாவில் பாலின அடிப்படையிலான பணியமர்த்தல்’ என்ற தலைப்பின் கீழ் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் 2 பேர் நடத்திய ஆய்வில், ஒரே மாதிரியான கல்வித்தகுதி இருந்தும் நகரச் சூழலில் 8.7 % பெண்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கின்ற னர் என்றும், ஆண்கள் வெறும் 4% பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். அதேநேரம் வேலை களை அணுகுவதில் ஆண்களுடன் ஒப்பிடும் போது கூடுதல் தடைகளை வேலை தேடும் பெண்கள் எதிர்கொள்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்திய அரசியலமைப்பின்படி வேலை வாய்ப்பில் பாலினத்தை அடிப்படையாகக் கொண்ட பாகுபாடு சட்டவிரோதமானது என்றாலும் இந்திய தொழிலாளர் சந்தைகள் வேலைவாய்ப்பில் பாலின பாகுபாடு கடைபிடிக்கின்றன. தகுதிகள் மற்றும் அனு பவம், ஆள் சேர்ப்பு மற்றும் விண்ணப்பிப் பதற்கான தேர்வு, விண்ணப்ப செயல்முறை என்ற மூன்று நிலைகளில் வேலைவாய்ப்பு பெறுவதில் பெண்கள் பல தடைகளை சந்திக்கின்றனர். வேலைவாய்ப்பில் பெண்க ளின் எண்ணிக்கை உயர்ந்தால் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி 27 சதவீதம் அதிகரிக்கும் என்ற விபரங்கள் இருந்தும், பெண் உழைப்பு புறக்கணிக்கப்படுகிறது. இதே போல பழமைவாதச் சிந்தனை, இளம் வயது திருமணம், குழந்தை தொழி லாளர் மற்றும் கட்டமைப்பு மற்றும் பல கார ணிகள் இந்தியா முழுவதும் பெண்களை கல்வியில் இருந்து தடுக்கும் காரணிக ளாக உள்ளன. ஆண்களில் 80.9% கல்வி யறிவு, பெண்கள் 64.6% கல்வியறிவு பெற்று உள்ளது, நாடு முழுவதும் கல்வியறிவில் பாலின வேறுபாட்டை அம்பலப்படுத்துகிறது. இவற்றைக் களைவதற்கு முயற்சிக்காத ஒன்றிய பாஜக அரசு, பெண்களின் உழைப்பை குடும்ப வேலைகளோடு மட்டும் அடைத்து வைப்பதற்கான நடைமுறைகளை,

ஆர்எஸ்எஸ்சின் இந்துத்துவா திட்டத்தின் அடிப்படையில் அமலாக்க முனைகிறது.  இத்தகைய தாக்குதல்கள் உள்ளிட்ட இன்றைய நிலையை, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாட்டு அரசியல் நகல் தீர்மானம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “பொருளாதார துயரத்தின் வலியை பெண்கள் மிக மோசமாக எதிர்கொள்கின்ற னர். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு கணிச மாக வெட்டியுள்ளது. இதையே பிழைப்புக் கான வழியாக கொண்டிருக்கும் கிராமப்புற பெண்கள் மிக மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டு வேலை மற்றும் குடும்ப நிறுவனங்களில் வேலை போன்ற ஊதியமற்ற வேலையின் சுமை மிகப் பெரும் அளவிற்கு அதிகரித்துள்ளது. ஆணா திக்க சமூக விதிமுறைகளின் காரணமாக வீட்டு நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பினை சுமக்க வேண்டியிருக்கும் பெண்கள், அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுகளின் சுழலில் சிக்கியுள்ளனர். தனியாக வாழும் பெண்கள் மற்றும் பெண்கள் குடும்பத் தலைவர்களாக உள்ள குடும்பங்கள் ஆகிய பிரிவினருக்கு ஒன்றிய அரசின் கொள்கைகளில் இருந்து குறிப்பான உதவி எதுவும் கிடைக்காத நிலையில், கடனை வாங்கியாவது வீட்டு செயல்பாடுகளை தொடர வேண்டும் என்ற நிர்ப்பந்தம், பெண்களை மைக்ரோ பைனான்ஸ் மற்றும் நகைகளை அடகு வைப்பது, கந்துவட்டி ஆகியோரின் இலக்குகளாக மாற்றுகிறது.

இக்காலத்தில் பல நேரங்களில் மிகவும் மிருகத்தனமான வன் கொடுமைகள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக அதிகரித்துள்ளன” - இப்படிப்பட்ட காலகட்டத்தில்தான் மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தை கடை பிடித்து வருகிறோம். இந்த ஆண்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு இணைந்து இந்திய அளவில், “கல்வி வேலைவாய்ப்பை வென் றெடுப்போம்; சமத்துவ இந்தியாவை மீட்டெடுப்போம்”, “மதச்சார்பற்ற இந்தியா வை மீட்டு வன்முறையற்ற சமூகத்தை  படைப்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து உள்ளன. அதன் அடிப்படையில் ஒன்றிய அரசாங்கத்தினுடைய மிக மோசமான பெண்கள் விரோதக் கொள்கைகளை தடுத்து  நிறுத்திட; ஒட்டுமொத்த பெண்களின் பாது காப்பை வலுப்படுத்த அனைத்து பெண்களும் பெண்கள் அமைப்புகளும் ஒன்றிணைவோம்!  கட்டுரையாளர்: திண்டுக்கல் மாவட்டச் செயலாளர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்