அரியலூர், ஜன.28 - ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட புதுக்குடி, மேலூர், தேவனூர், கொளத் தூர் உள்ளிட்ட 13 கிராமங்களில் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள், விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு முத லீட்டு நிறுவனம் மூலம் நிலங்கள் கையகப்படுத்தப் பட்டு 23 ஆண்டுகளாகியும் இதுவரை இழப்பீட்டு தொகை வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் சொந்த ஊரிலேயே அகதிகளாக வாழ்ந்து வரு கின்றனர். அரசு வழங்கும் எந்த ஒரு நலத் திட்டங்களையும், சலுகைகளையும் பெற முடியாமல் நிலங்களின் பட்டாக்களை தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்திடம்கொடுத்துவிட்டு அரசு வழங்கக்கூடிய மானியத் திட்டங்கள் மற்றும் இலவசங் களை கூட பெற முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2020 -21 பிப்ரவரி 25 ஆம் தேதி காட்டாத்தூர் தெற்கு, கூவத்தூர் தெற்கு ஆகிய இரண்டு கிராமங்களுக்கு 23 மடங்கு தொகை யை கொடுப்பது என அரசாணை வெளியிட்டும் இதுவரை விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. இதனால் காட்டாத்தூர் தெற்கு, கூவத்தூர் தெற்கு ஆகிய இரண்டு கிராம மக்கள் ஜெயங்கொண் டம் தனி வட்டாட்சியர் நிலம் எடுப்பு அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் “தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்திடம் இருந்து தகுந்த பதில் வந்தால் மட்டுமே நாங்கள் கலைந்து செல்வோம், இல்லையேல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தனி வட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் விவசாயிகளிடம் இரண்டு மாத கால அவகாசம் கேட்டுள்ளார். இதில் சமரசம் ஏற்பட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.