tamilnadu

நியூட்ரினோ ஆய்வகம் திட்டத்தை கைவிடுக : பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை, மார்ச் 14- தேனியில் நியூட்ரினோ ஆய்வ கம் அமைக்கும் திட்டத்தால் அம்மாவட்டத்தில் சுற்றுச்சூழ லுக்கு பாதிப்பு ஏற்படும் என்ப தால் அத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார். தேனி மாவட்டம் பொட்டி புரத்தில் நியூட்ரினோஆய்வு மையம் அமைக்க ஒன்றிய அரசு  ஒப்புதல் அளித்தது. இந்நிலை யில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:- தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கக் கூடாது. நியூட்ரினோ ஆய்வகம் அமைக் கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.