tamilnadu

img

மாநிலங்களவைத் தேர்தல் : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை, மே 15- மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கான 4 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப் பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்கள் 57  பேரின் பதவிக் காலம் வரும் ஜூன்  முதல் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடை கிறது. இதையொட்டி, இந்த பதவியிடங் களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் திமுக எம்பிக்களான டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கேஆர்என் ராஜேஷ்குமார் ஆகி யோரது பதவிக் காலமும், அதிமுக எம்.பி.க்களான ஏ.நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகியோரது பதவிக் காலமும் வரும் ஜூன் 29 ஆம் தேதியுடன்  முடிவடைகிறது. இந்த 6 இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனு தாக்கல் மே 24  ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதியுடன்  முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட் டுள்ளது. இந்த நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட் பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள் ளன. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- 2022 ஜூன் 10 ஆம் தேதி நடைபெறவி ருக்கும் 6 மாநிலங்களவை உறுப்பினர்க ளுக்கான தேர்தலில் திமுக கூட்டணிக் கான 4 இடங்களில், இந்திய தேசிய காங்கிரஸூக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 3 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளர்களாக தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார் மற்றும் இரா.கிராராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.