tamilnadu

img

இந்திய - அயலக தமிழர்களின் வளர்ச்சிக்கான படிப்புகள் உருவாக்கம் : தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் தகவல்

தஞ்சாவூர், ஜன.30 - இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் அயல்நாடு களில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு உதவும் வகையிலான சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளதாக, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் திருவள்ளுவன் தெரிவித்துள்ளார்.  தமிழக அரசின் நிதி நல்கையில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள, தமிழ் வளர் மையம் மற்றும் தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆகியவற்றுடன் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னா சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளை நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.  

அத்துடன் தமிழகத்தின் திருப்பூரில் இயங்கி வரும் சண்முகாலயா கலையிசை மன்றத்தில் பரதம் மற்றும் தமிழ் இசைப்பாடங்களில் நிலைப் படிப்பு களைப் பயில்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஜன.29 அன்று கையெழுத்திடப்பட்டன. பெட்னா அமைப்பின் செயலாளர் பாலா சுவாமிநாதன் இணைய வழியாகப் பங்கேற்றார். இந்நிகழ்வில் பேசிய துணைவேந்தர் வி.திருவள்ளு வன், “திருக்குறளில் மேலாண்மை, சன்மார்க்கம், பேசும்கலை, எழுதும்கலை, ஆளுமைத்திறன் மேம்பாடு, யோகக்கலை,

தமிழ் இசை மற்றும் பரதம் உட்பட பல துறைகளில் சான்றிதழ் மற்றும் பட்டயப்  படிப்புகளை வழங்கப் பாடத்திட்டங்கள் ஆயத்தமாகி வருகின்றன.  தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பிற மாநி லங்கள் மற்றும் அயல்நாடுகளில் இணையவழி மூலம்  இப்படிப்புகள் நடத்தப்படும். இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் அயலகத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கை மேம்பாட்டிற்குத் துணை நிற்கும் வகையில்  இப்பாடத்திட்டங்கள் அமைக்கப்படும். இப்படிப்பு களில் சேரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கல்வி நலத்துடன், மனவளமும் முன்னேற்றம் பெறும்  அம்சங்களும் பாடத்திட்டத்தில் உள்ளது” என்றார்.