14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வலியுறுத்தி அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் வியாழனன்று (ஜன. 27) பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்.துரை, பொதுச்செயலாளர் வி.தயானந்தம், பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி, விரைவு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.