‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு கோரும் தமிழக அரசின் சட்டத்தை திருப்பி அனுப்பிய ஆளுநரை கண்டித்து வெள்ளியன்று (பிப்.4) சைதாப்பேட்டையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ஆனந்த்குமார், ரா.பாரதி (தென்சென்னை), எஸ்.மிருதுளா, எல்.விக்னேஷ்வரன் (மத்தியசென்னை), காவியா, நித்திஷ்குமார் (வடசென்னை) உள்ளிட்டோர் பேசினர்.