தஞ்சாவூர், ஜன.6- சாலைப் பணியாளர்களின் பணி நீக்க காலத்திலும், பணிக்காலத்தி லும் உயிரிழந்தவர்களின் வாரிசு களுக்கு, கருணை அடிப்படை யில் பணி நியமனம் கோரி விண்ணப்பித்து, பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக காத்தி ருப்போருக்கு, சிறப்பு கவனம் செலுத்தி நெடுஞ்சாலைத் துறை யில் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைக ளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவல கம் முன்பு புதனன்று கைகளில் மெழுகுவர்த்தி ஒளி ஏந்தி முதல மைச்சரின் கவன ஈர்ப்பு வாயிற் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் கோட்டத் தலைவர் பி.சரவணன் தலைமை வகித்தார். கோட்டச் செயலாளர் டி.ஜனார்த்தனன் விளக்க உரையாற்றினார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ரெங்கசாமி, சாலை ஆய்வாளர் சங்க மாவட்ட தலைவர் டி.முத்துகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க வடக்கு வட்டச் செயலாளர் சி.அஜய் ராஜ், மருந்தாளுநர் சங்க மாவட்டத் தலைவர் கே.பாஸ்கர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கோதண்டபாணி, நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் கே.பழனிச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கோட்டப் பொருளாளர் ஜி. கருணாநிதி நன்றி கூறினார். நெடுஞ்சாலையை பராமரிக்க, ஐந்து கிலோ மீட்டருக்கு 2 சாலை பணியாளர்கள் என பணியிட ஒப்புதல் வழங்கி கிராமப்புற இளை ஞர்களுக்கு பணி வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்க ளின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி பணப்பலன்களை வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்க ளுக்கு தொழில்நுட்ப கல்வித் திறன் பெறாத ஊழியருக்கான ஊதியம் ரூ.5,200-ரூ.20,200 தர ஊதியம் 1,900 என கணக்கிட்டு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் ஏராளமான நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.