சென்னை,ஏப்.10- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக விவாதித்து அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வருவதற்காக நடந்த வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 114 வாக்குகளும், எதிராக இரண்டு வாக்குகள் கிடைத்தன. தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்களன்று (ஏப்.10) கேள்வி நேரம் முடிந்ததும் ஆளுநர் தொடர்பான சில பதங்களை நிறுத்தி வைக்கும் தீர்மானத்திற்கு நான்கில் மூன்று பங்கு ஆதரவு வேண்டும் என்பதால், பேரவை யில் எண்ணி கணிக்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எம்.எல்.ஏக்கள் அமர்ந்திருக்கும் பகுதி வாரியாக வாக்கெடுப்பு நடை பெற்றது. அப்போது பேரவையில் அனைத்து கதவுகளையும் மூட பேரவைத் தலைவர் மு. அப்பாவு உத்தர விட்டார். அதிமுக ஏற்கனவே அவையை விட்டு வெளியேறியதால், பாஜக எம்எல்ஏகள் வெளியேற அனுமதி கேட்ட போது பேரவைத் தலைவர் அனுமதி யில்லை என்றும் கதவுகள் மூடப்பட்டு விட்டதால் இனி வெளியேற முடியாது என்றும் கூறினார். பின்னர் நடைபெற்ற வாக்கெடுப் பில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து 144 பேர் வாக்களித்தனர். காந்தி, சரஸ்வதி ஆகிய 2 பாஜக எம்.எல்.ஏக்கள் எதிராக வாக்களித்தனர். யாரும் நடுநிலை வகிக்கவில்லை. தீர்மானத்திற்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளியே சென்று விட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமரும் பகுதி 6-ல் யாரும் இல்லை. வானதி சீனிவாசன், நயினார் நாகேந்தி ரன் ஆகியோர் பேரவைக்கு வரவில்லை. இதனால், சட்டப்பேரவை விதிகளி லுள்ள ஆளுநர் தொடர்பான சில பதங்களை நிறுத்திவைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். அது தொடர்பான விவாதத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்த னர்.