tamilnadu

தூத்துக்குடி-பெங்களூருவுக்கு மார்ச் 27 முதல் தினசரி விமான சேவை

தூத்துக்குடி,மார்ச் 15- தூத்துக்குடி-பெங்களூரு இடையே  மார்ச் 27 ஆம் தேதி  முதல் தினசரி விமான சேவை  தொடங்க உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. தூத்துக்குடி விமான நிலை யத்தின் ஓடுபாதை 1,350 மீட்ட ராக உள்ள நிலையில், அதனை ரூ.380 கோடியில் 3,115 மீட்டராக மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தூத்துக்குடி-பெங்களூரு இடையே வரும் மார்ச் 27 ஆம் தேதி முதல் தின சரி விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.  மேலும் தூத்துக்குடி-நாகப் பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச்சாலையாக மாற் றம் செய்யும் ஆய்வு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், 6  வழிச்சாலைக்கு நிலம் கையகப் படுத்தும் பணியை ஓராண்டுக் குள் நிறைவு செய்ய திட்டமிட் டுள்ளதாகவும் தேசிய நெடுஞ் சாலைத்துறை தெரிவித்துள் ளது.