tamilnadu

img

மதுரையில் கிரிக்கெட் ஸ்டேடியம்

மதுரையில் கிரிக்கெட் ஸ்டேடியம்

மகேந்திர சிங் தோனி திறந்து வைத்தார்

மகேந்திர சிங் தோனி திறந்து வைத்தார் மதுரை, அக். 9 - மதுரையில் அமைக்கப் பட்டுள்ள கிரிக்கெட் மை தானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வியாழனன்று திறந்து வைத்தார். வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆத ரவுடன் மதுரை சிந்தா மணி ரிங் ரோடு பகுதியில் வேலம்மாள் மருத்துவ மனை அருகில் 11.5 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச  தரத்திலான கிரிக்கெட் ஸ்டே டியம் கட்டப்பட்டுள்ளது. பயிற்சி ஆடுகளங்கள், வீரர்களுக்கான ஓய்வறை, உடற்பயிற்சிக் கூடம், ஆம்பு லன்ஸ் மற்றும் மருத்துவ மனை, கார் பார்க்கிங் என பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமான முறையில் ரூ. 325 கோடி செலவில் இந்த ஸ்டேடியம் உருவாக்க ப்பட்டுள்ளது. மழை பெய்தால் விரைவாக தண்ணீர் வெளியேறும் வகையில் வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட கிரிக்கெட் மைதான வல்லு நர்களுடன் ஆலோசித்து மின்கோபுரம் அமைக்கப் பட்டுள்ளது. 20 ஆயிரம் ரசி கர்கள் அமரும் வகையில் கேலரி அமைக்க திட்ட மிடப்பட்டு, முதற்கட்டமாக 7,300 இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மைதானம் அதன் சுற்றுப் பகுதியை கண்காணிக்க 197 கேமிராக்கள் பொருத்தப் பட்டுள்ளன.  சென்னை சேப்பாக்கத் திற்கு அடுத்து தமிழ்நாட் டின் 2-வது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் இது தான்.  இதனிடையே, இந்த ஸ்டேடியத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வியாழ னன்று திறந்து வைத்தார்.