சென்னை,மார்ச் 26- தமிழ்நாடு ஆளுநர் ரவி சட்ட சிக்கலை உருவாக்குவது அழகல்ல என்று திராடவிர் கழகத் தலைவர் கி.வீர மணி தெரிவித்திருக்கிறார். இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:- இந்திய அரசியலமைப்புச் சட்டத் தின் 200-வது கூறு மிகத் தெளிவாகவே மாநில சட்டமன்றம் மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பினால், ஆளுநர் அம்மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி விளக்கி, அவரது கடமை பற்றி தெளிவுபடுத்துகிறது. எனவே, 200-வது கூற்றின்படி, மாநில ஆளு நருக்கு நான்கு வழிமுறைகள் விதிக்கப் பட்டுள்ளன. ஒப்புதல் தரலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம், திருப்பி அனுப்பி மறு பரி சீலனை செய்யக் கேட்கலாம் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதா, அதே சட்டமன்றத்தால் மீண்டும் இரண்டாவது முறை நிறை வேற்றி, அவரது ஒப்புதலுக்கு அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டியதாகவோ இருந்தால், அதில் கையொப்பமிட்டு ஏற்பதோ, குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதோ தவிர ஆளுநருக்கு வேறு வழியே கிடை யாது என்பதே அரசமைப்புச் சட்டப்படி உள்ள அதிகாரம். ‘நீட்’ தேர்வு சம்பந்தமாக குடியர சுத் தலைவரிடம் விதிவிலக்குக் கோரி தமிழ்நாடு அரசு மீண்டும் அதே மசோ தாவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பி வைத்தது பிப்ரவரி 8 ஆம் அதனை அனுப்பி ஒரு மாதத்திற்குமேல் ஆகியும் முதலமைச்சர் நேரில் சந்தித்து வற்புறுத்திய பின்பும் கூட, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட் டோம் என்று ஆளுநர் அலுவலக செய்திக்குறிப்பு ஏதும் இதுவரை வராதது சரிதானா? ஜனநாயகக் கடமை தானா? நிதி நெருக்கடியை சட்டச்சிக் கலை உருவாக்குவது அரசியல மைப்புச் சட்டப்படி கடமையாற்ற வேண்டிய ஒரு நல்ல ஆளுநருக்கு அழகல்ல. உண்மையான இறை யாண்மை மக்களிடமே உள்ளது என்பதே நமது அரசியலமைப்புச் சட்டம் என்பதை அவர் புரிந்து கொள்வது அவசரம், அவசியம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.